Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெட்ரோல் பங்குகளுக்கு இணையாக வருகிறது மின்வாகன சார்ஜிங் நிலையம்: மத்திய அரசு அதிரடி!
மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீ தூரத்திற்கும் ஒரு மின்வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருன்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காத மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, மக்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையில், பொதுத்துறையில் இயங்கும் வாகனங்களை மின்வாகன மயமாக மாற்றும் முயற்சியிலும் பல்வேறு மாநிலங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வாறு, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மின் பஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதேப்போல தமிழக அரசும் மின் பஸ்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ஜெர்மன் நாட்டில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் கடனுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக பட்ஜெட் அறிக்கையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதையறிந்த மத்திய அரசு, மின்வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, மின்வாகனங்களை வாங்குபவர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்வாகனங்களை வாங்க சுலப மாத தவனை, எளிமையான கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆலோசனை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சார்ஜ் நிலைய பற்றாக்குறையை தீர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலையிலும் 25 கிமீ தூரத்துக்கு ஒரு மின்வாகன சார்ஜ் நிலையங்களை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் தனியார் வாகனங்களை கவரும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. மேலும், இதன்மூலம் நாட்டில் மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து யூனியன் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மின்வாகன சார்ஜிங் நிலையங்களை கட்டமைப்பது குறித்தான தகவல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சார்ஜிங் நிலையங்களை எவ்வாறு அமைக்க வேண்டும், சட்ட திட்ட முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு 25 கிமீ தூரத்திற்கும் இரு பக்கங்களிலும் ஒரு மின்சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அதேபோல மாநிலத்தின் முக்கிய நகரப் பகுதிகளிலும் இதுபோன்ற நிலையங்களை அமைக்க வேண்டும்" என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் அதாவது சராசரியாக இன்னும் பதினோறு ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மூலை முடுக்கிலும் மின்வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையானது, மக்களுக்கு மின்வாகனங்களை சார்ஜிங் செய்வதில் உள்ள இடையூறு நீக்கப்பட்டு, மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...