Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெட்ரோல் பங்குகளுக்கு இணையாக வருகிறது மின்வாகன சார்ஜிங் நிலையம்: மத்திய அரசு அதிரடி!
மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீ தூரத்திற்கும் ஒரு மின்வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருன்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காத மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, மக்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையில், பொதுத்துறையில் இயங்கும் வாகனங்களை மின்வாகன மயமாக மாற்றும் முயற்சியிலும் பல்வேறு மாநிலங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வாறு, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மின் பஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதேப்போல தமிழக அரசும் மின் பஸ்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ஜெர்மன் நாட்டில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் கடனுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக பட்ஜெட் அறிக்கையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதையறிந்த மத்திய அரசு, மின்வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, மின்வாகனங்களை வாங்குபவர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்வாகனங்களை வாங்க சுலப மாத தவனை, எளிமையான கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆலோசனை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சார்ஜ் நிலைய பற்றாக்குறையை தீர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலையிலும் 25 கிமீ தூரத்துக்கு ஒரு மின்வாகன சார்ஜ் நிலையங்களை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் தனியார் வாகனங்களை கவரும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. மேலும், இதன்மூலம் நாட்டில் மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து யூனியன் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மின்வாகன சார்ஜிங் நிலையங்களை கட்டமைப்பது குறித்தான தகவல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சார்ஜிங் நிலையங்களை எவ்வாறு அமைக்க வேண்டும், சட்ட திட்ட முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு 25 கிமீ தூரத்திற்கும் இரு பக்கங்களிலும் ஒரு மின்சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அதேபோல மாநிலத்தின் முக்கிய நகரப் பகுதிகளிலும் இதுபோன்ற நிலையங்களை அமைக்க வேண்டும்" என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் அதாவது சராசரியாக இன்னும் பதினோறு ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மூலை முடுக்கிலும் மின்வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையானது, மக்களுக்கு மின்வாகனங்களை சார்ஜிங் செய்வதில் உள்ள இடையூறு நீக்கப்பட்டு, மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!