Just In
- 34 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆபத்தான நேரத்தில் தோள் கொடுத்து உதவும் சவுதி அரேபியா... இந்தியாவிற்காக செய்யும் காரியம் இதுதான்...
ஆபத்தான நேரத்தில் இந்தியாவிற்கு தோள் கொடுத்து உதவி செய்ய சவுதி அரேபியா முன் வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்கா விலகியது. இதன் பின் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. மீறினால் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பயமுறுத்தியது.
இருந்தபோதும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் கூடுதலாக 6 மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது. ஆனால் அந்த 6 மாத கால அவகாசமும் கடந்த மே 1ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இனி கூடுதலாக சலுகை வழங்க முடியாது எனவும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அதே சமயம் அமெரிக்காவின் உத்தரவை மீறினால் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்னையை சமாளிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யின் இழப்பை ஈடுகட்டும் வகையில், வேறு நாடுகளிடம் இருந்து கூடுதல் சப்ளையை பெற இந்தியா முயன்று வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சவுதி அரேபியாவை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம், ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வழங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சவுதி அராம்கோ வழங்கவுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஏகே சர்மா இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''வரும் ஜூலை மாதம் முதல் 6 மாத காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கி கொள்வதாக சவுதி அராம்கோவிடம் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்'' என்றார்.
முன்னதாக இந்திய நிறுவனங்களை கடந்த மாதமே சவுதி அராம்கோ அணுகியிருந்தது. அப்போது ஈரான் கச்சா எண்ணெய் இழப்பை ஈடு கட்டும் வகையில் நாங்கள் கூடுதலாக சப்ளை செய்கிறோம் என சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!