Just In
- 8 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 56 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி?
துபாயில் தச்சராக பணிபுரியும் இந்தியர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியிருப்பபதாக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் லாட்டரி சீட்டு அடித்தால் மட்டுமே முடியும். அவ்வாறு, லாட்டரி சீட்டு அடித்து, ஒரு சிலர் கோடீஸ்வரரான கதைகளையெல்லாம் நாம் செய்திகளின் வாயிலாக கேட்டிருப்போம். அதேசமயம், லாட்டரி சீட்டுகளால் சொத்துக்களை இழந்து தெருவிற்கு வந்த பணக்காரர்களின் சோக கதையையும் நாம் அறிந்திருப்போம். இதன் காரணமாகதான், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்குத் தடை விதிக்ப்பட்டுள்ளது.
ஆனால், நாம் பார்க்கவிருக்கும் இந்த பதிவில் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கமலேயே கோடீஸ்வரர் ஆகியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் பல்விர் சிங். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் தச்சராக பணியாற்றி வருகிறார். இவர் துபாய் சென்றபோது, தன் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும்விதமாக, அந்த நாட்டில் செயல்பட்டு வரும் டியு என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டினை வங்கியுள்ளார்.
இந்த சிம் கார்டினை பல்விர் சிங் கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், டியு தொலைத் தொடர்பு நிறுவனம், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது. அதில், "ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது டியு நெட்வர்க் சிம் கார்டினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களின் நம்பர் முடக்கப்படும்" என கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து, பல்வீர் சிங் அவரது நம்பரை குறிப்பிட்ட நாளுக்குள் அப்டேட் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பல்வீர் சிங்-கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஒருவர், உங்களுக்கு பரிசு அடித்துள்ளது. இதனை டியு அலுவவகத்தில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பாத பல்வீர் சிங் ஆரம்பத்தில் பிராங்க் கால் என நினைத்து, அழைப்பினைது துண்டித்துள்ளார். பின்னர், மீண்டும் தொடர்புகொண்ட டியு நிர்வாகத்தினர், நீங்கள் குறிப்பிட்ட நாளில் உங்களது சிம் கார்டினைப் புதுப்பித்தக் காரணத்திற்காக உங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மெக்லாரன் நிறுவனத்தின் 570எஸ் ஸ்பைடர் கார் பரிசாக அடித்துள்ளது என புரிய வைத்தனர்.
இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த பல்வீர் சிங் செய்வதறியாமல் திகைத்து நின்றார். பின்னர், அவரை அழைத்துச் சென்ற டியு தொலைத் தொடர்பு நிர்வாகத்தினர், அவருக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள மெக்லாரன் 570எஸ் ஸ்பைடர் காரை பரிசாக அளித்தனர். ஆனால், காரை பரிசாகப் பெற்ற பல்வீர் சிங், அதனைப் பயன்படுத்தாமல், வெறொரு நபருக்கு விற்றுள்ளார். மேலும், இதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து அவரின் தொழிலில் முதலீடு செய்துள்ளார்.
காரை விற்றது கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும், அந்த பணத்தை அவர் செலவு செய்த விதம் பாராட்டக்கூரியதாக இருக்கிறது. அதேசமயம், இந்த அதிக விலைக்கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை வைத்து பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை.
பல்வீர் சிங்கிற்கு பரிசாக அளிக்கப்பட்ட மெக்லாரன் 570எஸ் ஸ்பைடர் கார் இந்திய மதிப்பில் துபாயில் ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் 3.8 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. மேலும், இந்த கார் மணிக்கு 328 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு