Just In
- 58 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
இந்தியாவின் முதல் விமான டாக்ஸி சேவை ஹரியானா மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்ப்போம்.
சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஹிசார் நகரங்களுக்கு இடையே புதிய விமான சேவை ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய விமான சேவை நாடு முழுவதும் அவ்வப்போது துவங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த விமான சேவையின் சிறப்பம்சமே, குறைவான தூரத்திற்கு குறைவான செலவில் செல்ல குறிப்பாக மிடில்-க்ளாஸ் மக்களை டார்க்கெட் செய்து துவங்கப்பட்ட சேவையாகும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சூரரைப் போற்று படத்தில் சூர்யா துவங்குவாறே அதுபோலதான் இது. ஆனால் அந்த படத்தில் சென்னை- மதுரைக்கு எவ்வளவு விமான கட்டணமாக நிர்ணயித்தார் என்பது தெரியவில்லை.
ஆனால் இங்கு ஹிசார்- சண்டிகருக்கே ரூ.1,755 கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். ஹிசார் விமான நிலையத்தில் இருந்து சண்டிகர் கிட்டத்தட்ட 250கிமீ தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை இந்த விமானத்தின் மூலமாக வெறும் 45 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவையின் முதல் பயணம் ஹிசாரில் இருந்து சண்டிகர் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.
இந்த விமான சேவையின் குறை என்று பார்த்தால், இந்த சேவைக்கான விமானங்களில் ஓட்டுனரையும் சேர்த்து வெறும் நான்கு நபர்கள் மட்டுமே அமர முடியும். அப்படி பார்த்தால் குடும்பத்துடன் மூன்று மூன்று நபர்களாகவே சொல்ல முடியும்.
அவர்களுக்கே டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் ரூபாயை கடந்துவிடும். இந்த விமான சேவை மத்திய அரசின் 'உடான்' திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே, குறைவான செலவில் மக்களை வானில் பறக்க வைக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் டிக்கெட்டின் விலை இந்த நோக்கத்திற்கு எதிராக உள்ளதுபோல் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த விமான சேவைக்கான முன்பதிவுகள் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விமான சேவையை துவங்கிய நிறுவனம் தனி பயன்பாட்டிற்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது. ஆனால் அவற்றிற்கான டிக்கெட் விலை மேலே கூறியதை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்த விமான சேவையில் தினமும் விமானங்கள் ஹிசார் - சண்டிகர் நகரங்களுக்கு இடையே பறக்கவுள்ளன.
இந்த மலிவான விமான சேவையில் முதல் விமானம் ஹிசாரில் இருந்து சண்டிகரை நோக்கி பறந்துள்ளது, அடுத்த விமானம் வருகிற ஜனவரி 18ஆம் தேதி ஹிசாரில் இருந்து டெக்ராடூனை நோக்கியும், அதற்கடுத்த விமானம் ஜனவரி 23ல் ஹிசாரில் இருந்து தர்மசாலாவை நோக்கியும் பறக்கவுள்ளது.