Just In
- 43 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Movies Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
இந்தியாவின் முதல் விமான டாக்ஸி சேவை ஹரியானா மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்ப்போம்.
சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஹிசார் நகரங்களுக்கு இடையே புதிய விமான சேவை ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய விமான சேவை நாடு முழுவதும் அவ்வப்போது துவங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த விமான சேவையின் சிறப்பம்சமே, குறைவான தூரத்திற்கு குறைவான செலவில் செல்ல குறிப்பாக மிடில்-க்ளாஸ் மக்களை டார்க்கெட் செய்து துவங்கப்பட்ட சேவையாகும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சூரரைப் போற்று படத்தில் சூர்யா துவங்குவாறே அதுபோலதான் இது. ஆனால் அந்த படத்தில் சென்னை- மதுரைக்கு எவ்வளவு விமான கட்டணமாக நிர்ணயித்தார் என்பது தெரியவில்லை.
ஆனால் இங்கு ஹிசார்- சண்டிகருக்கே ரூ.1,755 கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். ஹிசார் விமான நிலையத்தில் இருந்து சண்டிகர் கிட்டத்தட்ட 250கிமீ தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை இந்த விமானத்தின் மூலமாக வெறும் 45 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவையின் முதல் பயணம் ஹிசாரில் இருந்து சண்டிகர் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.
இந்த விமான சேவையின் குறை என்று பார்த்தால், இந்த சேவைக்கான விமானங்களில் ஓட்டுனரையும் சேர்த்து வெறும் நான்கு நபர்கள் மட்டுமே அமர முடியும். அப்படி பார்த்தால் குடும்பத்துடன் மூன்று மூன்று நபர்களாகவே சொல்ல முடியும்.
அவர்களுக்கே டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் ரூபாயை கடந்துவிடும். இந்த விமான சேவை மத்திய அரசின் 'உடான்' திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே, குறைவான செலவில் மக்களை வானில் பறக்க வைக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் டிக்கெட்டின் விலை இந்த நோக்கத்திற்கு எதிராக உள்ளதுபோல் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த விமான சேவைக்கான முன்பதிவுகள் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விமான சேவையை துவங்கிய நிறுவனம் தனி பயன்பாட்டிற்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது. ஆனால் அவற்றிற்கான டிக்கெட் விலை மேலே கூறியதை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்த விமான சேவையில் தினமும் விமானங்கள் ஹிசார் - சண்டிகர் நகரங்களுக்கு இடையே பறக்கவுள்ளன.
இந்த மலிவான விமான சேவையில் முதல் விமானம் ஹிசாரில் இருந்து சண்டிகரை நோக்கி பறந்துள்ளது, அடுத்த விமானம் வருகிற ஜனவரி 18ஆம் தேதி ஹிசாரில் இருந்து டெக்ராடூனை நோக்கியும், அதற்கடுத்த விமானம் ஜனவரி 23ல் ஹிசாரில் இருந்து தர்மசாலாவை நோக்கியும் பறக்கவுள்ளது.