Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
இந்தியாவின் முதல் விமான டாக்ஸி சேவை ஹரியானா மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்ப்போம்.
சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஹிசார் நகரங்களுக்கு இடையே புதிய விமான சேவை ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய விமான சேவை நாடு முழுவதும் அவ்வப்போது துவங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த விமான சேவையின் சிறப்பம்சமே, குறைவான தூரத்திற்கு குறைவான செலவில் செல்ல குறிப்பாக மிடில்-க்ளாஸ் மக்களை டார்க்கெட் செய்து துவங்கப்பட்ட சேவையாகும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சூரரைப் போற்று படத்தில் சூர்யா துவங்குவாறே அதுபோலதான் இது. ஆனால் அந்த படத்தில் சென்னை- மதுரைக்கு எவ்வளவு விமான கட்டணமாக நிர்ணயித்தார் என்பது தெரியவில்லை.
ஆனால் இங்கு ஹிசார்- சண்டிகருக்கே ரூ.1,755 கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். ஹிசார் விமான நிலையத்தில் இருந்து சண்டிகர் கிட்டத்தட்ட 250கிமீ தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை இந்த விமானத்தின் மூலமாக வெறும் 45 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவையின் முதல் பயணம் ஹிசாரில் இருந்து சண்டிகர் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.
இந்த விமான சேவையின் குறை என்று பார்த்தால், இந்த சேவைக்கான விமானங்களில் ஓட்டுனரையும் சேர்த்து வெறும் நான்கு நபர்கள் மட்டுமே அமர முடியும். அப்படி பார்த்தால் குடும்பத்துடன் மூன்று மூன்று நபர்களாகவே சொல்ல முடியும்.
அவர்களுக்கே டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் ரூபாயை கடந்துவிடும். இந்த விமான சேவை மத்திய அரசின் 'உடான்' திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே, குறைவான செலவில் மக்களை வானில் பறக்க வைக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் டிக்கெட்டின் விலை இந்த நோக்கத்திற்கு எதிராக உள்ளதுபோல் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த விமான சேவைக்கான முன்பதிவுகள் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விமான சேவையை துவங்கிய நிறுவனம் தனி பயன்பாட்டிற்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது. ஆனால் அவற்றிற்கான டிக்கெட் விலை மேலே கூறியதை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்த விமான சேவையில் தினமும் விமானங்கள் ஹிசார் - சண்டிகர் நகரங்களுக்கு இடையே பறக்கவுள்ளன.
இந்த மலிவான விமான சேவையில் முதல் விமானம் ஹிசாரில் இருந்து சண்டிகரை நோக்கி பறந்துள்ளது, அடுத்த விமானம் வருகிற ஜனவரி 18ஆம் தேதி ஹிசாரில் இருந்து டெக்ராடூனை நோக்கியும், அதற்கடுத்த விமானம் ஜனவரி 23ல் ஹிசாரில் இருந்து தர்மசாலாவை நோக்கியும் பறக்கவுள்ளது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!