Just In
- 36 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான தேவை, கடந்த ஜூலை மாதத்தில், 7.36% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான தேவை, கடந்த ஜூலை மாதத்தில், 7.36% அதிகரித்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடியால், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் மட்டும், இந்தியாவில் மொத்தம் 30,47,582 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது ஒரு சாதனை அளவாக கருதப்பட்டது.
ஆனால் அதன்பின் வந்த 2017-18ம் நிதியாண்டில், இந்த சாதனை உடனடியாக முறியடிக்கப்பட்டது. 2017-18ம் நிதியாண்டில், மொத்தம் 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனையானது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு, பெரு நகரங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சிறு நகர சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் என்பது போன்ற பிரச்னைகளையும் கடந்து, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஏற்படுத்தி இருக்கும் மற்றொரு தலையாய பிரச்னை எரிபொருள் தட்டுப்பாடு.
வாகனங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் (fuel) தேவையும் ஒருபக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள், இந்தியாவின் எரிபொருள் தேவை மிக மிக வேகமாக உயர்ந்து வருவதை பறை சாற்றுகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2,314 டன் பெட்ரோலை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும். இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக வேகமாக உயர்ந்து வருவதே, பெட்ரோல் தேவை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையானது, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 22.28 சதவீதமும், ஜூலை மாதத்தில் 8.70 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிப்புதான், பெட்ரோல் நுகர்வு உயர முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்தியா நுகரும் ஒட்டுமொத்த பெட்ரோலில் 60 சதவீதத்தை, இரு சக்கர வாகனங்கள்தான் பயன்படுத்தி வருகின்றன.
அதே நேரத்தில் இந்தியாவின் டீசல் தேவையும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்தமாக 6,610 டன் டீசலை, இந்தியா நுகர்ந்துள்ளது. இது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.
வணிக பயன்பாட்டு வாகனங்களின் (commercial vehicle) விற்பனை உயர்வு காரணமாகவே, டீசல் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையானது, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 42 சதவீதமும், ஜூலை மாதத்தில் 39 சதவீதமும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசலை போன்று ஏவியேஷன் டர்பைன் ப்யூயல் (aviation turbine fuel) எனப்படும் ஏடிஎப் உள்ளிட்ட இதர எரிபொருட்களின் தேவையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையானது 7.36 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும், 17,057 டன் எரிபொருளை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 7.36 சதவீதம் அதிகம். இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகியது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன்னால் இயன்ற வரை, ஈரான் அரசுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்.
பொருளாதார ரீதியில் ஈரானுக்கு நெருக்கடி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை, ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதை நவம்பர் 4ம் தேதிக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே அமெரிக்கா உடனான பொருளாதார உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை, இந்தியா படிப்படியாக குறைத்து கொண்டே வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கான தேவை ஏற்கனவே மிக அதிகமாக உள்ளது. இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தினால், பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயரும் அபாயம் நிலவி வருகிறது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி முழுமையாக நிறுத்தம் செய்யப்படாத தற்போதைய சூழலிலேயே, மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு காரணமாக, இந்தியாவில் மிக அதிக விலைக்குதான் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படி இருக்கையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டால், பெட்ரோல், டீசலுக்கான தேவை இன்னும் கடுமையாக அதிகரித்து, அதன் விலை மிக அதிக அளவில் உயரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவை மிக மிக கடுமையாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள ஈரான் பிரச்னை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!