Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?
இளைஞர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாக நடு ரோட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு பொதுவெளியில், குறிப்பாக, வாகனங்கள் செல்லும் சாலையில் செய்வதற்கு இந்தியாவில் அனுமதி இருக்கின்றதா?, என்பது பற்றிய தகவலையும், மேலும், இளைஞரின் அத்துமீறலுக்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நம்ம ஊரு டிடிஎஃப் வாசனை போல் உத்தர்காண்ட் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் ஃபேமஸான நபராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் பாபி கத்தாரியா. இவரை ஃபாலோ செய்வதற்கென்றே இன்ஸ்டாகிராமில் தனி கூட்டம் உண்டு. ஆகையால், இன்ஸ்டாவில் இவரின் சேட்டை சற்று அதிகமாக தென்படுகின்றது. உடலை எப்படி கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வது போன்ற டிப்ஸ்களை அவர் வழங்கி வருகின்றார்.
இதுதவிர இன்னும் என்டர்டெயின்மென்டை தனது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக ஃபாலோவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில் அவர் வெளியிட்ட ஓர் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சாலையின் நடுவில் அமர்ந்து கொண்டு ஜேக் அண்ட் டேனியல்ஸ் மதுபானத்தை குடிப்பது போன்ற ஓர் வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவே அவர் தற்போது சர்ச்சையில் சிக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இன்ஸ்டாவில் ஃபாலோவர்கள் அதிகம் ஆக வேண்டும் என்பதற்காக பிற அந்த ஆப் பயன்பாட்டாளர்கள் சிலர் ஆபாசமாக வீடியோ வெளியிடுதல், முரண்பாடான செயல்களைச் செய்தல் என பல அறுவறுத்தக்க காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் அவர்களின் சேட்டை எல்லையை மீறிக் கொண்டு செல்வதாக சமூக நல ஆர்வலர்கள் சிலர் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையிலேயே பொதுவெளியில் அமர்ந்துக் கொண்டு பாபி கத்தாரியா எனும் இளைஞர் மதுபானத்தை அருந்தும் வீடியோவை வெளியிட்டிருக்கின்றார். முக்கிய தலைவர்கள் சிலர் மது ஒழிப்பிற்காக போராடிக் கொண்டிருக்கின்ற இந்தமாதிரியான வேலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புழங்கக் கூடிய சமூக வலைதளத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இளைஞர் செயல்பட்டிருக்கின்றார்.
ஆகையால், பல தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்பும், கண்டனமும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே உத்தர்காண்ட் காவல்துறையினர் இன்ஸ்டா பயன்பாட்டாளர் மீது வழக்கு பதிந்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றார். குறிப்பாக, சாலையில் அமர்ந்து அவர் செய்த அறுவறுக்கத்தக்க செயலுக்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஜூலை 28 ஆம் தேதி பதிவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இப்போதே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வீடியோவை, "சாலையில் அமர்ந்து கொண்டு என்ஜாய் செய்யும் நேரம் இது" என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான பதிவிற்காகவே அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
சாலையை மறித்து மதுபானம் குடித்தல், பொதுவெளியில் அறுவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டல் என பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபி கத்தாரியா மட்டுமின்றி அவருடன் இருந்த மற்றுமொரு நபர் மீதும் இதேமாதிரியான நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்திருக்கின்றனர்.
சாலையில் அமர்ந்து மதுபானம் குடிக்காலமா?
நம்ம ஊருல இருக்க பல பேரு வீட்டில் இருக்கும் மனைவிக்கு பயந்து டாஸ்மாக்கில் வாங்கும் மதுபானங்களை சாலையோரம், காட்டு பகுதி போன்ற இடங்களில் அமர்ந்து குடித்துவிட்டு அங்கேயே அந்த காலி பாட்டில்களைப் போட்டு விட்டு செல்கின்றனர். இவ்வாறு, பொதுவெளியில் செய்வது குற்றமாகும். குறிப்பாக, பொதுமக்கள் கூடும் பகுதியில் திறந்த அமைப்பில் மது அருந்துவது தண்டனைக்கு உரிய செயல்.
இந்த மாதிரியான சூழலிலேயே இன்ஸ்டா பயனர் நடு ரோட்டில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் மதுபானத்தைக் குடித்திருக்கின்றார். வாகன ஓட்டிகள் பலர் தங்கு தடையின்ற சென்று வருவதற்கு முறையான பாதை இல்லை என புலம்பிக் கொண்டிருக்கின்ற வேலையில், பாபி கத்தாரியா எந்தவொரு தயக்கமும் இன்றி சாலையில் அமர்ந்து மதுபானம் குடித்துள்ளார். "நடு ரோட்டில் அமர்ந்து உரிமைக்காக போராட்டாம் செய்யவே இங்கு அனுமதி இல்லை. இதுல மதுபானம் வேற அவரு குடிச்சிருக்காரு" என பலரை கேள்வியெழுப்ப செய்திருக்கின்றது பாபியின் செயல்.
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!