Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!
உலகின் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணித்து புதிய சாதனையை படைத்துள்ளது காந்தாஸ் நிறுவன்ததின் போயிங் 787-9 விமானம். இந்த நீண்ட நேர பயணம் குறித்தும், விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மேலை நாடுகளுக்கான விமான பயண நேரத்தை குறைப்பதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. 'புரொஜெக்ட் சன்ரைஸ்' என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்கான முதல்கட்ட சோதனைகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது. அதன்படி, அமெரிக்காவிலுள்ள நியூயார்க நகரிலிருந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு நேரடி விமானத்தை இயக்க முடிவு செய்தது. இதற்காக, போயிங் நிறுவனத்தின் 787-9 ட்ரீம்லைனர் விமானம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இரவு 9.27 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் நேற்று காலை 7.43 மணியளவில் சிட்னி விமான நிலையத்தை அடைந்தது. இந்த விமானம் 19 மணி 16 நிமிடங்கள் பறந்து இந்த பயணத்தை இடைநில்லாமல் பறந்து நிறைவு செய்து சாதனை படைத்தது. அதாவது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் அளவுக்கு இந்த பயண நேரம் நீண்டது.
இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட காந்தாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 விமானத்தில் 42 பிசினஸ் வகுப்பு இருக்கைகளும், 28 பிரிமீயம் வகுப்பு இருக்கைகளும், 166 எக்கானமி வகுப்பு இருக்கைகளும் உள்ளன. ஆனால், விமானத்தின் பாதுகாப்பு, எரிபொருள் செலவு உள்ளிட்ட விஷயங்களுக்காக மொத்தமாக 49 பேர் மட்டுமே இந்த விமானத்தில் பயணித்தனர்.
காந்தாஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ், காந்தாஸ் நிறுவனத்தின் விமானங்களில் அதிகம் பயணிக்கும் 6 பயணிகள், சிறப்பு மருத்துவக் குழுவினர், 6 பேர் கொண்ட பைலட் குழு, 6 விமானப் பணியாளர் குழு மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் இந்த விமானம் பயணித்தது.
இந்த பயணத்திற்காக புத்தம் புதிய போயிங் 787-9 விமானம் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலிருந்து டெலிவிரி எடுக்கப்பட்ட இந்த போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் முதல்முறையாக இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விமானத்தில் பாரம் ஏற்றப்படவில்லை. பயணிகளுக்கான உடைமைகளுக்கு கூட அதிக கட்டுப்பாடுகளுடன் பயன்பாட்டிற்கு தேவையானவற்றிற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த விமானத்தில் 101 டன் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. அதாவது, 250 டன் எடை கொண்ட இந்த விமானத்தின் எடையில் 40 சதவீதத்திற்கும் மேல் எரிபொருளுடன் இந்த விமானம் பறந்தது. இந்த விமானத்திற்கு சியன் கோல்டிங் கேப்டனாக செயல்பட்டார். பைலட் குழுவினர் ஷிஃப்ட் முறையில் இந்த விமானத்தை இயக்கினர். கூடுதல் எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் 16,200 கிமீ தூரத்தை 19 மணி 16 நிமிடங்களில் கடந்துள்ளது.
சாதாரணமாக போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் 14,498 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது. தரையிலிருந்து 35,000 முதல் 43,000 அடி உயரத்தில் இயக்க முடியும். இந்த விமானத்தில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு GEnx டர்போஃபேன் ஜெட் எஞ்சின்கள் (GEnx-1B74/75/P2) பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 1,049.58 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.
எதிர்காற்று மற்றும் சீதோஷ்ண நிலையை மனதில் வைத்து விமானத்தின் பாதையை தொடர்ந்து மாற்றியமைத்து சிறந்த முறையில் நிறைவு செய்ததாக கேப்டன் சியன் கோல்டிங் குறிப்பிட்டுள்ளார். பயணத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக முடித்ததாக குறிப்பிட்டு பேசினார். விமானத்தில் பயணித்த அனைவருமே பிசினஸ் க்ளாஸ் எனப்படும் உயர் வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணித்தனர்.
இந்த விமானத்தில் பயணித்தவர்களின் மூளையின் செயல்பாடு, மன நிலை, உடல் நிலை குறித்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. அத்துடன், அடுத்த 21 நாட்களுக்கு பயணித்த அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பர். இதன் அடிப்படையில் கிடைக்கும் உடல்நல தரவுகள், இந்த விமான சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு இறுதி முடிவில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த பயணம் குறித்து காந்தாஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ் கூறுகையில்," இது விமான வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நியூயார்க் நகரிலிருந்து சிட்னி நகருக்கு நாங்கள் இயக்கும் ஒரு இடத்தில் நின்று வரும் மற்றொரு விமானம் மூன்று மணிநேரத்திற்கு முன்பாக புறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தைவிட ஒன்றரை நிமிடங்களுக்கு முன்னதாகவே சிட்னி நகரை எங்களது நேரடி விமானம் அடைந்துவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, மூன்று மணிநேரத்திற்கும் மேலாக பயண நேரம் மிச்சப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிட்னி நகருக்கு இடைநில்லா நேரடி விமானத்தை சோதனை அடிப்படையில் இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விமானம் 17,000 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் 19.5 மணிநேரம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைகள் வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்தால் வரும் 2021ம் ஆண்டு முதல் இந்த நேரடி விமானச் சேவைகளை துவங்குவதற்கு காந்தாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை வழங்கி வருகிறது. சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இந்த விமானம் 18 மணி 25 நிமிடங்கள் பறந்து செல்கிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!