Just In
- 45 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 49 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...
சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்த நபர், விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஏழையாக இருந்து ஏராளமானோர் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ராகுல் தனேஜா. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சைக்கிள் மெக்கானிக்காக இருந்தார். ஆனால் 16 வருடங்கள் கடுமையாக உழைத்த பிறகு, அவர் வாழ்க்கையில் உயர்ந்துள்ளார். ராகுல் தனேஜா ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்தார்.
ஆனால் தற்போது சொகுசு கார்களை வைத்திருப்பதுடன், அவற்றின் பதிவு எண்ணுக்கு பல லட்ச ரூபாயை செலவிடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு வறுமையான குடும்பத்தில்தான் ராகுல் தனேஜா பிறந்தார். மெக்கானிக்காக தொழில் செய்து வந்த தந்தைக்கு ராகுல் தனேஜா ஆரம்பத்தில் உதவி செய்து வந்தார்.
சைக்கிள்களுக்கு பஞ்சர் ஓட்டுவதுதான் அப்போது அவரது வேலை. ஆனால் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என விரும்பியதால், ராகுல் தனேஜா வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் தாபா ஒன்றில் சுமார் 2 ஆண்டுகள் அவர் வேலை செய்தார். மேலும் அந்தந்த நேரத்திற்கு ஏற்ற தொழில்களையும் ராகுல் தனேஜா செய்து வந்தார்.
அதாவது தீபாவளியின்போது பட்டாசுகளை விற்பனை செய்வது, ஹோலியின்போது வண்ண பொடிகளை விற்பனை செய்வது மற்றும் மகர சங்கராந்தியின்போது பட்டங்களை விற்பனை செய்துவது என பல்வேறு தொழில்களை ராகுல் தனேஜா செய்து வந்தார். இதுதவிர ராகுல் தனேஜா மாடலிங்கும் கூட செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் ஜெய்ப்பூர் மற்றும் மிஸ்டர் ராஜஸ்தான் ஆகிய பட்டங்களை ராகுல் தனேஜா வென்றுள்ளார். இதற்கு இடையே அவர் ஆட்டோவும் ஓட்டியுள்ளார். மேலும் தினசரி செய்தி தாள்களையும் அவர் வினியோகம் செய்துள்ளார். இவ்வாறான கடின உழைப்பின் மூலம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக்கும் அளவிற்கு ராகுல் தனேஜா முன்னேறினார்.
ராகுல் தனேஜா வாங்கிய முதல் சொகுசு கார் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) ஆகும். செடான் ரக காரான இதனை ராகுல் தனேஜா கடந்த 2011ம் ஆண்டு வாங்கினார். ஆனால் இந்த காரை வாங்கியதால் மட்டும் ராகுல் தனேஜா திருப்தியடைந்து விடவில்லை. RJ 14 CP 0001 என்ற ஃபேன்ஸியான பதிவு எண்ணையும் இந்த காருக்கு வாங்கிய பிறகுதான் ராகுல் தனேஜா திருப்தியடைந்தார்.
பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரை ராகுல் தனேஜா இன்னமும் வைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L) காரை ராகுல் தனேஜா வாங்கினார். இது அவரது கனவு கார் ஆகும். கருப்பு நிறத்தில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்குவதற்காக ராகுல் தனேஜா 1.50 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார்.
ஆனால் இந்த காரை வாங்கிய பிறகும் கூட ராகுல் தனேஜா டெலிவரி எடுக்கவில்லை. ஏனெனில் இந்த காரின் பதிவு எண்ணும் தனக்கு விருப்பமானதாக இருக்க வேண்டும் என்பதால், அவர் காத்திருக்க முடிவு செய்தார். சுமார் ஒரு மாதம் காத்திருந்து தனக்கு பிடித்த 0001 என்ற பதிவு எண்ணை ராகுல் தனேஜா வாங்கினார். அவருடைய ஜாகுவார் எக்ஸஜே எல் காரின் பதிவு எண் RJ 45 CG 0001 ஆகும்.
ராகுல் தனேஜாவின் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே எல் ஆகிய இரண்டு கார்களுமே 0001 என்ற பதிவு எண்ணை கொண்டுள்ளன. இதில், ஜாகுவார் எக்ஸ்ஜே எல் காரின் பதிவு எண்ணுக்கு ராகுல் தனேஜா சுமார் 16 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளார். அதே நேரம் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் பதிவு எண்ணுக்காக ராகுல் தனேஜா சுமார் 10 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளார்.
ஆக மொத்தம் இந்த இரண்டு கார்களின் பதிவு எண்ணுக்காக மட்டும் ராகுல் தனேஜாவிற்கு சுமார் 26 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. சைக்கிள் மெக்கானிக்காக இருந்து இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது சாதாரண விஷயம் அல்ல. வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் வைத்து கொண்டு முன்னேறி விட முடியாது. இதற்கு மிக கடுமையான உழைப்பும் தேவை.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!