Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூப்பர்... ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர் செய்த காரியம்... மனசார வாழ்த்தும் மக்கள்
ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர் செய்த காரியம், மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய காரை வாங்க நாம் செலவிடும் தொகை, நம் வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்று. எனவே கார்களை கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்பவர்கள் இங்கு ஏராளம். குறிப்பாக கார்களில் ஸ்கிராட்ச் விழுந்து விடக்கூடாது என்பதில் பலர் தெளிவாக உள்ளனர். ஸ்கிராட்ச்களில் இருந்து கார்களை பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகளையும் அவர்கள் கையாள்கின்றனர்.
பெரும்பாலும் வாகன நிறுத்துமிடங்களில்தான், கார்களில் அதிகளவு ஸ்கிராட்ச்கள் விழுகின்றன. இதனால் வாகன நிறுத்துமிடங்களில் கார்களை விடுவதற்கே பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அப்படியே வாகன ஸ்டாண்டுகளில், காரை விடுவதாக இருந்தாலும், காலியாக இருக்கும் ஒரு இடத்தில்தான் அதனை நிறுத்துகின்றனர்.
வாகன நிறுத்துமிடங்களின் காலியான பகுதியில் காரை பார்க்கிங் செய்வதன் மூலம், மற்ற வாகனங்களால் ஸ்கிராட்ச் ஏற்படும் அபாயத்தை ஓரளவிற்கு குறைத்து கொள்ள முடியும். காரில் கீறல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இப்படி ஒவ்வொருவரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். ஆனால் காரில் ஸ்கிராட்ச் விழுவதை பொருட்படுத்தாமல் ஆசிரியர் ஒருவர் சூப்பரான காரியம் ஒன்றை செய்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க, முன்கள பணியாளர்களான மருத்துவர்களும், செலிலியர்களும் போராடி வருகின்றனர். மேலும் சுகாதார பணியாளர்கள், போலீசார் ஆகியோரின் சேவையும் பாராட்டுக்குரியதாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் ஆன்லைனில் பாடம் நடத்திய ஈரான் ஆசிரியை ஒருவர் சமீபத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆசிரியை மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததற்கு காரணம் உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், படுக்கையில் இருந்தபடி, ஒரு கையில் செல்போனையும், மறு கையில் புத்தகத்தையும் பிடித்து கொண்டு அவர் பாடம் நடத்தினார்.
இந்த புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்தனர். தன் மாணவர்கள் மீது அந்த ஆசிரியைக்கு இருக்கும் அக்கறையை எடுத்துக்காட்டும் வகையில் இச்சம்பவம் அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் நெகிழ்ந்தனர்.
இந்த வரிசையில் அதே ஈரானில் இருந்து மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஆசிரியர், ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக, அவரின் கிராமத்திற்கு காரில் சென்றதாக கூறப்படுகிறது. அது போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாத குக்கிராமம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அந்த ஆசிரியர் காரில் சென்று பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், கரும்பலகை இல்லாத காரணத்தால், தனது வெள்ளை நிற காரையே அந்த ஆசிரியர் ஒயிட்போர்டாக பயன்படுத்தியுள்ளார். காரில் கீறல்கள் விழலாம், கார் பாதிக்கப்படக்கூடும் என்பதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.
மாணவிக்கு பாடம் நடத்துவது ஒன்றே அவரது குறிக்கோளாக இருந்துள்ளது. எத்தனை பேர் தங்கள் காரில் இப்படி செய்ய முன்வருவார்கள்? என்பது தெரியவில்லை. ஈரானை சேர்ந்த இந்த இரண்டு ஆசிரியர்களின் கடமை உணர்ச்சியும், மாணவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையும் மற்ற அனைவருக்கும் முன்மாதிரி என்றால் மிகையல்ல.
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!