Just In
- 47 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்
கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பீரிமியம் உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு (Third-party Insurance) பீரிமியம் உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டிற்கான இன்சூரன்ஸ் பீரிமியமை கணிசமாக உயர்த்துவது தொடர்பான யோசனையை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) முன்மொழிந்துள்ளது.
தற்போதைய சூழலில், 1,000 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பீரிமியம் 1,850 ரூபாயாக உள்ளது. இதனை நடப்பு 2019-20ம் நிதியாண்டிற்கு, 2,120 ரூபாயாக உயர்த்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் 1,000 சிசி முதல் 1,500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான பீரிமியமை அதிகரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 1,000 சிசி முதல் 1,500 சிசிக்கு இடைப்பட்ட கார்களுக்கான பீரிமியம் 2,863 ரூபாயாக உள்ளது.
இது 3,300 ரூபாயாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் லக்ஸரி கார்களுக்கான (1,500 சிசிக்கும் மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட கார்கள்) மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை உயர்த்துவது தொடர்பாக எவ்வித திட்டமும் முன்மொழியப்படவில்லை.
எனவே லக்ஸரி கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியம் தற்போது உள்ள 7,890 ரூபாயிலேயே தொடரும். ஆனால் 75 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை 427 ரூபாயில் இருந்து 482 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் 75 சிசி மற்றும் 350 சிசிக்கு இடைப்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான பீரிமியமும் உயரவுள்ளது. ஆனால் இந்த வகை இரு சக்கர வாகனங்களுக்கான பீரிமியமை எவ்வளவு உயர்த்துவது என்பது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள தொகை குறித்த விபரம் வெளியாகவில்லை.
எனினும் சூப்பர் பைக்குகளுக்கான (350 சிசிக்கும் அதிகமான பைக்குகள்) பீரிமியமை உயர்த்தும் திட்டம் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் புதிய கார்களுக்கு மூன்று ஆண்டுகள், புதிய டூவீலர்களுக்கு 5 ஆண்டுகள் என்ற சிங்கிள் பீரிமியம் ரேட்டிலும் மாற்றம் முன்மொழியப்படவில்லை.
இதுதவிர எலெக்ட்ரிக் ப்ரைவேட் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு விலையில் 15 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இ-ரிக்ஸாக்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை உயர்த்தும் திட்டமும் முன் வைக்கப்படவில்லை.
ஆனால் பள்ளி பேருந்துகளுக்கான தொகை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லாரிகள், டாக்ஸிக்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றுக்கான தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் டிராக்டர்களுக்கான பீரிமியமும் உயரலாம்.
பொதுவாக ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியம் திருத்தியமைக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இம்முறை அடுத்த உத்தரவு வரும் வரை, பழைய விலையையே தொடர்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சூழலில்தான், நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாம் நபர் காப்பீட்டின் புதிய விலை தொடர்பான வரைவு திட்டத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது முன்மொழிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350