Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?
ஜப்பான் அரசு அந்நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள டிராபிக்கை தற்போதே கணக்கிட்டு அதற்கு முன்னேற்பாடாக பறக்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியாரை சேர்ந்
ஜப்பான் அரசு அந்நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள டிராபிக்கை தற்போதே கணக்கிட்டு அதற்கு முன்னேற்பாடாக பறக்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியாரை சேர்ந்த சுமார் 21 நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் 10 ஆண்டுகளில் ஜப்பானில் கார்களை பறக்கவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பறக்கும் கார்களை நாம் இதுவரை திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளாகவோ அல்லது கார்டூன் சேனல்களிலோ பார்த்திருப்போம். சிறு வயதில் பறக்கும் கார்களில் செல்லவேண்டும் என ஆசைப்பட்ட நாம் விரைவில் அந்த கனவை நினைவாக்க காத்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பறக்கும் கார்கள் என்பது விரைவில் சாத்தியமாகவுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது ஜப்பானும் இனைந்துள்ளது.
ஜாப்பான் அரசு தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களான உபேர், ஏர்பஸ், போயீங், டோயோட்டா குழுமத்தின் ஸ்டார்ட்அப் ஆன கார்டிவேட்டர், ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளட்ட 21 வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவோரை இணைந்து பறக்கும் காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பான் அரசு சுமார் 40.4 பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளது.
இந்த 21 குழுமங்களும், பறக்கும் கார் தயாரிக்க பயன்படும் பல்வேறு வகையான தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்கி வரும் நிறுவனங்கள். அதிக திறன் கொண்ட பேட்டரி தயாரிக்கும் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் மோட்டார் தயாரிக்கும் நிறுவனம், பறக்கும் கார்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம், கார்களுக்கான தின பயன்பாட்டில் அனுபவம் நிறைந்த நிறுவனம் இவ்வாறான நிறுவனங்கள் ஒன்றினைந்துள்ளன.
இந்நிறுவனங்களின் பிரதி நிதிகள் வரும் 29ம் தேதியில் ஜப்பானில் சந்தித்து இந்த திட்டத்தை எப்படி எடுத்து செல்வது என்ற ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
இதில் உபேர் நிறுவனம் ஏற்கனவே பிரான்ஸ், பாரீஸ் ஆகிய பகுதிகளில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர தற்போது அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
இது குறித்து ஜப்பான் அரசு கூறுகையில் : "பறக்கும் கார்களை தயாரிக்க ஐப்பான் அரசு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யும். ஜப்பானில் உள்ள டிராப்பிக்கிற்கு இந்த பறக்கும் கார்கள் தீர்வு சொல்லும் என நம்புகிறோம். இந்த கார்களுக்கு ஏற்றபடி எங்களது சட்ட விதிமுறைகளையும் மாற்ற முடிவு செய்துள்ளோம். " என கூறினார்.
உலகில் எந்த இடங்களில் தற்போது பறக்கும் கார்கள் செயல்பாட்டில் இல்லை இன்றும் ஆராய்ச்சி மற்றும் விடிவமைப்பில் தான் உள்ளது. பறக்கும் ட்ரோன்கள் தான் பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பறக்கும் ட்ரோன்களுக்கு என்று சில விதிமுறைகளை வைத்துள்ளனர்.
இதற்கிடையில் உபேர் நிறுவனம், மற்றும் டெக்ஸாஸ் பல்கலை., அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து ராணுவ ஆய்வு லேப்பை அமைத்து அதில் பறக்கும் வானகங்கள் குறித்த தயாரிப்பை உருவாக்கி வருகிறது. தற்போது அந்த குழு புதிய வித ரிக்கிங் ரோட்டார்களை தயாரித்து டெஸ்ட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அதே உபேர் நிறுவனம் தற்போது பாரீஸ் மற்றும் பிரான்ஸ் பகுதியில் பறக்கும் கார்களை தயாரிக்கும் குழுவிற்காக சுமார் 23 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது உள்ள சுழ்நிலையில் இந்தியாவில் பறக்கும் கார் திட்டம் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது சாத்தியம் இல்லை என கூறமுடியும்.
பிரான்ஸ் மற்றும் பாரீஸ் நகரின் கட்டமைப்புகள் மிக நேர்த்தியாக இருப்பதால் அந்த நாடுகளில் பறக்கும் கார்களை செயல்படுத்துவது சுலபம் ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் கட்டமைப்பு ஒழுங்கு இல்லை. இதனால் இந்தியாவில் தற்போதய சூழ்நிலைக்கு பறக்கும் கார்கள் சாத்தியமில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?