Just In
- 23 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 56 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரியல் லைஃப் சூப்பர் ஹீரோவிற்கு காஸ்ட்லியான பரிசு அறிவித்த பிரபல தொழிலதிபர்... என்ன பரிசுனு தெரியுமா?
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழைந்தையை மீட்டெடுத்த பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கேவிற்கு தொழிலதிபர் விலையுயர்ந்த பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தன்னுடைய உயிரை துச்சமென நினைத்து தண்டவாளத்தில் தவறி விழுந்த குழைந்தையை மீட்டெடுத்ததற்காக ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பல தரப்பில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். எதிரில் அதி-வேகத்தில் ரயில் வருவதை பார்த்தும் துணிச்சலுடன் ஓடி சென்று குழந்தையை மீட்டதற்காக திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு முக்கிய பிரபலங்கள் வரை பலர் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும், மரியாதையையும் வழங்கி வருகின்றனர்.
இந்திய ரயில்வே துறை அமைச்சகம் ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவித்திருக்கின்றது. மயூர் ஷெல்கோவின் வீர தீர செயலுக்கு இந்த மிக சிறிய தொகை போதாது என்றாலும், அவருக்காக இந்த பரிசுத் தொகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்தக்கது.
இந்நிலையில், மயூர் ஷெல்கோவிற்கு புத்தம் புதிய பிராண்ட் நியூ பைக் ஒன்றை பரிசாக வழங்க இருப்பதாக பிரபல தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார். ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தரேஜா, இவரே ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவிற்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
'ஜாவா ஹீரோஸ்' எனும் புதிய திட்டத்தின் கீழ் இந்த மோட்டார்சைக்கிளை வழங்க இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பார்வை திறன் குறைபாடுள்ள தாயுடன் ரயில்வே நடைமேடையில் சென்றுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென ரயில் இருப்புப்பாதையில் தவறி விழுந்தார்.
இதைப் பார்த்த பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே, உடனடியாக தண்டவாளத்தில் குதித்து மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்தார். எதிர்புறத்தில் ரயில் மிக அதிக வேகத்தில் வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பின்னரும் அவர் மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையை காப்பாற்றினார்.
இந்த சம்பவம்குறித்த வீடியோவை ரயில்வே துறை அமைச்சகமே முதன் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. கடந்த 17ம் தேதி அன்று மஹராஷ்டிரா மாநிலத்தின் வாங்கனி ரயில் நிலையத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்தே மத்திய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சகம் மயூர் ஷெல்கேவிற்கு ரூ. 50,000 பரிசு தொகையை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தரேஜா பைக் பரிசு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
எந்த மாடல் மோட்டார்சைக்கிளை நிறுவனம் பரிசாக வழங்க இருக்கின்றது என்பதுகுறித்த தகவல் தெரியவில்லை. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் ஜாவா, 42, ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா பெராக் ஆகிய தேர்வுகளில் பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றது.
ஒற்றை ஏபிஎஸ் மற்றும் இரட்டை ஏபிஎஸ் எனும் வேரியண்டுகளில் மேற்கூறிய மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், 42 மற்றும் பெராக் ஆகிய இரு மாடல்கள் மட்டும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதியில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அதேவேலையில், ஜாவா மற்றும் ஃபார்ட்டி டூ ஆகிய இரு மாடல்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ. 1,77,215 தொடங்கி ரூ. 1,97,487 வரையிலான விலையில் ஜாவா பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
ஆகையால், ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்ததை விட தனியார் நிறுவனமான ஜாவா மோட்டார்சைக்கிளின் பரிசு அறிவிப்பு சற்று அதிக காஸ்ட்லியானதாக அமைய இருக்கின்றது. இதுபோன்ற என்னதான் விலையுயர்ந்த பொருட்கள் மயூர் ஷெல்கேவிற்க்கு அறிவித்தாலும், அவர் மேற்கொண்ட செயல் விலை மதிப்பற்றது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.