Just In
- 16 min ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 2 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 3 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 5 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Movies ஒரே காரில் கமலும் சிம்ரனும்?.. அப்புறம்தான் கௌதமி?.. கண்டபடியெல்லாம் சொன்ன பிரபலம்
- News பாமக+அமமுக+ ஓபிஎஸ்.. அண்ணாமலை கணக்கு.. கூட்டிகழிச்சு பார்த்தால், தப்புமா.. அல்லது தப்பாகுமா?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
குடிபோதையில் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய ஜேசிபி டிரைவர்... திக், திக் வீடியோ!
குடிபோதையில் ஜேசிபி எந்திரத்தை வைத்து டிரைவர் ஒருவர் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றை ஜேசிபி எந்திரத்தை வைத்து அதன் ஓட்டுனர் தரை மட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவத்தால், அச்சமடைந்த பெட்ரோல் நிலைய பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ஜீப் ஒன்றில் அங்கு விரைந்துள்ளனர். அப்போது, ஜேசிபி டிரைவரை பிடிக்க முயன்றதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த குடிபோதை டிரைவர், ஜேசிபி எந்திரத்தின் டோசர் மூலமாக அந்த போலீஸ் ஜீப்பை தாக்க முற்பட்டுள்ளரா்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ் ஜீப்பின் ஓட்டுனர் பின்னால் நகர்த்தியுள்ளார். ஆனால், போலீஸ் ஜீப்பை அந்த ஜேசிபி எந்திரத்தின் டோசர் மூலமாக பலம் கொண்ட மட்டும் வைத்து முட்டித் தள்ளியுள்ளார். இதில், அந்த ஜீப் தலைக்குப்புற கவிழ்ந்து பல்டியடித்தது.
அப்போது, ஒரு போலீஸ்காரர் அதிலிருந்து தப்பி வெளியேறி இருக்கிறார். அதிலிருந்த மேலும் இரண்டு போலீஸ்காரர்கள் பின்னர் அங்கிருந்தவர்கள் துணையுடன் வெளியேறினர். இதில், போலீஸ்காரர்களுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜேசிபி எந்திரத்தை வைத்து ஆட்டம் காட்டிய குடிபோதை ஓட்டுனரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால், அங்கிருந்தவர்கள் துணையுடன் அந்த ஜேசிபி ஓட்டுனரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
பொது சொத்தை சேதப்படுத்திய, பணியில் இருந்த அரசு பணியாளர் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஓட்டுனர் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை பார்த்த பலரும் குடிபோதையில் ஆட்டம் காட்டிய ஜேசிபி டிரைவரின் மூர்க்கத்தனம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
குடிபோதையால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்த சம்பவமும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. நாட்டின் பெரிய அவலமாக குடிபோதை விபத்துக்கள் மாறி வருகின்றன. இதில், உரிய கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
போலீசார் மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பதற்காக இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், போலீசாரின் கடமையைை செய்யும்போது சில விபரீதங்களும் நடந்து விடுகின்றன. அதனை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஆனால் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சில மாநில அரசுகளே இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒரு சில மாநில அரசுகள், அபராத தொகைகளை அதிரடியாக குறைத்துள்ளன.
இருந்தபோதும் புதிய மோட்டார் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, வாகன ஓட்டிகளிடம் போலீசார் கடுமையாக கெடுபிடி காட்டி வருகின்றனர். தமிழ் நாட்டை பொறுத்தவரை புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பெரும்பாலும் அபராதம் விதிப்பது கிடையாது. தமிழகத்தில் அபராத தொகைகள் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் அது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் போலீசார் வழக்கம் போல வாகன தணிக்கையில் கடும் கெடுபிடி காட்டி கொண்டுதான் உள்ளனர். இந்த சூழலில் போலீசாரின் வாகன தணிக்கையால் சாலை விபத்தில் சிக்கிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபரீத சம்பவம் தமிழக தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவருக்கும் பிரிய தர்ஷினி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி பிரியதர்ஷினி டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
செங்குன்றத்தில் இருந்து அவர் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அப்போது சரியாக மாலை 5 மணி என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திருவள்ளூர் நெடுஞ்சாலை காந்தி நகர் போலீஸ் பூத் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பிரியதர்ஷினி வந்த டூவீலரை லத்தியை காட்டி தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் அப்போது பிரியதர்ஷினி வளைவில் திரும்பி கொண்டிருந்ததால், அவரால் டூவீலரை கட்டுப்படுத்த முடியவில்லை. நிலை தடுமாறிய பிரியதர்ஷினி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று பிரியதர்ஷினியின் மீது மோதியது. இதனால் இடுப்பு மற்றும் கால்களில் பிரியதர்ஷினிக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே பிரியதர்ஷினியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. முன்னதாக இந்த சம்பவம் காரணமாக மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீஸ் பூத் மற்றும் காவல் துறையினர் வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவங்கள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் சிவந்தி நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த 10க்கும் அதிகமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரியதர்ஷினி தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் பிரியதர்ஷினி சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த சூழலில் அவர் தற்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகதான் அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
போலீஸ் வாகன தணிக்கையின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் போக்குவரத்து விதிகளை மீறிய மற்றொரு இளம்பெண் ஒருவர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இருந்து நைசாக தப்பித்துள்ளார்.
இதற்காக அவர் என்ன செய்தார்? என்பது தெரிந்தால், அட இது புது ஐடியாவா இருக்கே என நீங்கள் நினைப்பது உறுதி. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது.
இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. எனவே மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் இதுபோன்ற கடுமையான அபராத தொகைகளால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி ஒரு சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே ஒரு சில மாநிலங்களில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.
சில சமயங்களில் வாகனங்களின் மதிப்பை விட அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கடும் அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டி ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இது தலைப்பு செய்தியாக மாறியது.
இந்த சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். கடும் அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, போலீசாரிடம் அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததே இதற்கு காரணம். நாடு முழுக்க கவனம் ஈர்த்துள்ள இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ளது. டெல்லியில் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கடும் கெடுபிடி காட்டி வருகின்றனர்.
இதன்படி ஸ்கூட்டரில் வந்த இளம்பெண் ஒருவரையும் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர். அந்த இளம்பெண் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருந்தார். வாகனம் ஓட்டும்போது இயர்போன் மூலமாக பேசுவது/கேட்பது, ஹெல்மெட்டை சரியாக அணியாதது, உடைந்த நம்பர் பிளேட்டை பொருத்தியிருந்தது என பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களை அவர் செய்திருந்தார்.
அத்துடன் வாகனம் தொடர்பான எந்த ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இவை அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அவருக்கு அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்தனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, டிரைவிங் லைசென்ஸை சமர்ப்பிக்காததற்காக அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
அதேபோல் ஆர்சி புக் இல்லாததற்காக 5 ஆயிரம் ரூபாயும், போலீசாரிடம் காட்டுவதற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத காரணத்திற்காக 3 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இதுதவிர ஹெல்மெட் விதிமீறலுக்காக தனியாக 1,000 ரூபாய் அபராதமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் காற்று மாசுபாடு தரநிலை விதிமீறலுக்காக போலீசாரால் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் விதித்திருக்க முடியும்.
இதுதவிர சேதமடைந்த நம்பர் பிளேட் மற்றும் வாகனம் ஓட்டும்போது இயர்போன் பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காகவும் தனியாக அபராதம் விதித்திருக்க முடியும். இவை அனைத்தையும் சேர்த்து பார்த்தால் பெரும் தொகை அபராதமாக வரும். இதனால் அந்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். என்ன செய்வது? என தெரியாமல் திகைத்த அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டார்.
மேலும் ஹெல்மெட்டால் தாக்கி விடுவேன் எனக்கூறியும் அவர் போலீசாரை அச்சுறுத்தினார். ஆனால் அவரின் இந்த அச்சுறுத்தல்களால் போலீசார் குழப்பமடையவில்லை. நிதானமாகவே இருந்தனர். இதனால் வெறுப்படைந்த அந்த இளம்பெண் ஹெல்மெட்டை சாலையில் தூக்கி வீசினார். மேலும் உடல் நிலை சரியில்லாததால், தன்னை அங்கிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த இளம்பெண் கூறினார்.
ஆனால் இதற்கெல்லாம் போலீசார் மசியவில்லை. பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதால், அபராதம் விதித்தாக வேண்டும் என அந்த இளம்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர். எனவே அந்த இளம்பெண் இறுதியாக பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார். அபராத ரசீது வழங்குவதாக இருந்தால், தற்கொலை செய்து கொள்வேன் என அந்த இளம்பெண் மிரட்டல் விடுத்தார்.
இந்த அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் இந்த வீடியோவில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே இளம்பெண்ணின் அச்சுறுத்தல் காரணமாக போலீசார் அவரை விடுவித்து அங்கிருந்து அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.