Just In
- 14 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 46 min ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 2 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 3 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!
ஜீப் காம்பஸ் காரை புக் செய்த வாடிக்கையாளருக்கு நீண்ட இழுபறி செய்து டெலிவரி செய்த டீலரை கோவா நுகர்வோர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும், இதுபோன்று மீண்டும் தவறை செய்யாத இருக்கும் வகையில் அபராதத் தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வாகன விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் புக் செய்த நேரத்தில், அவர்களது வாகனங்களை டெலிவரி செய்து வருகின்றனர். மாமூலாக நடைபெற்று வரும் இந்த செய்கையானது, சில சமயங்களில் சொதப்பலைச் சந்திக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டீலர்களின் அக்கறையற்ற செயலே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, டெலிவரியின் கால தாமதம் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு முறையான தகவல்கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் எரிச்சலடைவதுடன், மிகுந்த மன வேதனையும் அடைகின்றனர்.
இதுபோன்ற ஓர் சம்பவம்தான் யூனியன் பிரதேசமான கோவாவில் அரங்கேறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள ஒர்லிம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் டெர்டுலியனோ டேரில் கோம்ஸ். இசைக் கலைஞரான இவர், ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, அந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும், ஜீப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற குவாட்ரோஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்டை அணுகியுள்ளார்.
இந்த குவாட்ரோஸ் நிறுவனம், ஜீப் நிறுவனம் மட்டுமின்றி, யமஹா, சுஸுகி, வெஸ்பா, அப்ரில்லா, ஃபியட் மற்றும் அபார்த் ஆகிய நிறுவனங்களின் டீலர்ஷிப்பைப் பெற்று இயங்கி வருகிறது.
இந்த நிலையில், இசைக் கலைஞர் கோம்ஸ், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று, குவாட்ரோஸ் மோட்டார்ஸிடம் ரூ. 50 ஆயிரம் செலுத்தி ஜீப் காம்பஸ் காரை புக் செய்தர். அப்போது, இன்னும் இரு வாரங்களில் காரை உங்களுக்கு டெலிவரி செய்துவிடுவோம் என ஷோரூம் நிறுவனத்தின் ஊழியர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் டீலர்களால் கோம்ஸுக்கு காரை டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும், காரை டெலிவரி செய்ய மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால், இந்த கால அவகாசத்திலும் அவர்களால் காரை டெலிவரியை செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஷோரூம் ஊழியர் ஒருவர் காரை 2018 அக்டோபர் 8ம் தேதிக்குள் டெலிவரி செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதில் பூரிப்படைந்த கோமஸ், காருக்கான தொகையை வங்கி மூலம் கடன் பெறப்பட்டு செலுத்தியுள்ளார். மேலும், கிடைக்காத காருக்கு இஎம்ஐ தொகையும் வட்டியுடன் செலுத்தி வந்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக டெலிவரியில் மட்டும் இழுத்தடிப்பு நீடித்த வண்ணமாகவே இருந்துள்ளது. இவ்வாறு நீண்ட இழுபறிக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து கோமஸுக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஜீப் காம்பஸ் கார் டெலிவரி செய்யப்பட்டது.
முன்னதாக, ஷோரூம் செயலால் மன உலைச்சலுக்கு ஆளான கோமஸ், கோவாவில் உள்ள கன்ஸ்யூமர் கோர்ட்டில் இதுகுறித்து மனு ஒன்றை சமர்பித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு அண்மைமயில் வெளியாகியுள்ளது.
அதில், வாடிக்கையாளரை நீண்ட நாட்களாக அலைகழிப்ப செய்த குவாட்ரோஸ் டீலருக்கு தண்டனை அளிக்கும் விதமாக, ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், டெலிவரி செய்யப்படாத காருக்கு செலுத்திய இஎம்ஐ-யின் வட்டித் தொகையையும் கோமஸுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட அந்த டீலரை நுகர்வோர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
ஜீப் நிறுவனம் அதன் காம்பஸ் காரில் முதல் முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதில் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது யூரோ-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்விற்கு நிகரானதாகும். இந்த கார் குறித்த முழுமையான தகவலை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!