Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?
இந்தியாவில் தற்சமயம் உள்ள பெரிய பிரச்சனைகளில் பெட்ரோல் & டீசல் விலையேற்றங்களும் ஒன்றாகும். குறிப்பாக தினந்தோறும் பைக், கார் போன்ற வாகனங்களை நம்பியே பிழைப்பை ஓட்டும் மக்களுக்கு மிக பெரிய தலை வலியாக எரிபொருள் விலை உயர்வு மாறி வருகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக விலை அதிகரிக்கப்பட்டு வருவதால், பெட்ரோல் & டீசல் விலைகள், ATF எனப்படும் விமான விசையாழி எரிபொருளின் விலைகளை காட்டிலும் சுமார் 30% அதிக விலை கொண்டதாக தற்சமயம் உள்ளது. நாட்டில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் எரிபொருள்களை காட்டிலும் விமான எரிபொருளின் விலைகளை எவ்வாறு அரசாங்கத்தால் குறைவாக நிர்ணயிக்க முடிகிறது? வாருங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.
விமான விசையாழி எரிபொருள் பெரும்பான்மையாக விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் தான் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெட்ரோல் & டீசல் விலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.17) இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு இந்தியாவிலேயே பெட்ரோல் & டீசல் விலைகள் அதிகமாக உள்ள இடமாக ராஜஸ்தானின் கங்காநகர் தொடர்கிறது. நேற்று (அக்.18) வரையில் இந்த ராஜஸ்தான் நகரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.117.86 ஆகும். அதுவே 1 லி டீசலின் விலை ரூ.105.95 இருந்தது. வரும் நாட்களில் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம்.
மறுப்பக்கம் விமான விசையாழி எரிபொருளின் விலையையும் மத்திய அரசாங்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இருப்பினும் பெட்ரோல் & டீசல் விலைகள் உடன் ஒப்பிடுகையில் நாட்டில் ATF-இன் விலை ஏறக்குறைய 30% குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு, தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் ATF-இன் விலை ரூ.79 மட்டுமே ஆகும்.
ஆனால் இதே டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.105.84 மற்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.57 ஆகும். இந்த அளவிற்கு வாகன எரிபொருளின் விலைகளும், விமான எரிபொருளின் விலைகளும் வித்தியாசப்படுவதற்கு, அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளே மிக முக்கிய காரணம் என செய்திகள் கூறுகின்றன.
வழக்கமான வாகன எரிபொருள்களை போன்று ATF-விற்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் வரிகளை விதிக்கின்றன. எரிபொருள்களின் மதிப்பை கூட்டும் இந்த வரிகள் மாநிலத்திற்கும் மாநிலம் சற்று வித்தியாசப்படுகின்றன. விமான விசையாழி எரிபொருளுக்கு மத்திய அரசாங்கம் நிலையாக 11% வரியை விதிக்கிறது. மாநில அரசாங்கங்கள் விதிக்கும் வரிகள் 0%-இல் இருந்து 30% வரையில் தற்சமயம் உள்ளன.
அதிகப்பட்சமாக குஜராத்தில் 30% வரி விமான எரிபொருளுக்கு விதிக்கப்படுகிறது. குஜராத்திற்கு அடுத்து நமது தமிழகம் மற்றும் பீகாரில் 29% வரியும், கர்நாடகாவில் 28% வரியும் விதிக்கப்படுகின்றன. ATF மீதான இந்த மதிப்பு கூட்டு வரியை 4 சதவீதத்திற்கு மிகாமல் குறைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் விமான நிலையங்களின் சுமைகளை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதிக வரி விதிக்கப்படும் குஜராத்தில் கூட ATF மீதான ஓட்டுமொத்த வரி அதன் மதிப்பில் பாதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குஜராத் அரசாங்கம் 30 சதவீத வரி வசூலிக்க, மத்திய அரசு 11 சதவீதத்தை பெற்றுக்கொள்கிறது. அப்படியென்றால் கூட 41% தான் வருகிறது அல்லவா. ஆனால் பெட்ரோல் & டீசல்களுக்கு விதிக்கப்படும் வரிகள் அதிகமாகும்.
அதாவது சில்லறை பெட்ரோல் விலையில் மட்டுமே சுமார் 60 சதவீதத்தை மத்திய & மாநில அரசாங்கங்கள் வரியாக பெறுகின்றன. டீசலிற்கு 58%. ரூபாயாக பார்த்தோமேயானால், 1 லிட்டர் பெட்ரோலிற்கு ரூ.32.80, டீசலிற்கு ரூ.31.80 ஆகும். மத்திய அரசின் கலால் வரி மற்றும் சரக்கு கட்டணங்கள், மாநில அரசு விதிக்கும் வரி உள்ளிட்டவை மட்டுமில்லாமல் டீலர்கள் எடுக்கும் கமிஷனிற்கும் சேர்த்துதான் நாம் பெட்ரோல் & டீசல் வாங்கும்போது பணம் கொடுத்து வருகிறோம்.
டெல்லியில் மாநில அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலில் இருந்து ரூ.23-ஐ கலால் வரியாக பெறுகிறது. 1 லி டீசலில் சற்று குறைவாக ரூ.13. ATF, பெட்ரோல் & டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி-இன் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் நாட்களில் எரிபொருள் மீதான வரிகளை கணிசமாக குறைக்க மத்திய அரசின் இந்த நடவடிக்கை உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.