Just In
- 51 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...
மருத்துவமனைகளுக்கு செல்வோரை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து உலக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. ஆரம்பத்தில் மிக தீவிரமாக இருந்த வைரஸின் பரவல் பிறகு கடந்த ஆண்டு இறுதிகளில் சற்று குறைய ஆரம்பித்தது.
குறிப்பாக நமது இந்தியாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு வருடம் துவக்கும் சமயத்தில் சிறிது குறைவாகவே பதிவானது. ஆனால் தற்போது, கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தினந்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக வட மாநிலங்களில் கொரோனாவினால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாகப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அவரது பகுதியில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். ரவி என்ற பெயர் கொண்ட அவர், இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருப்பவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்று வருகிறார்.
இதுகுறித்து ரவி அளித்த பேட்டியில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, அருகே உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவரை இறக்கிவிட்டதற்கு பிறகு தான் தனக்கு இந்த யோசனை வந்ததாக தெரிவித்துள்ளார்.
ரவி தனது அழைப்புப்பேசி எண்ணை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவிட்டுள்ளார். இதனால் மக்கள் எளிதாக அவரை அணுக முடிகிறது. இந்தியாவில் இதுவரையில் கொரோனாவினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.8 லட்சத்தை கடந்து கொண்டிருக்கிறது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகின்ற இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 23) மஹாராஹ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா, சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட 10 மாநில முதமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி உள்ளார்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!