Just In
- 14 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 28 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 36 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...
மருத்துவமனைகளுக்கு செல்வோரை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து உலக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. ஆரம்பத்தில் மிக தீவிரமாக இருந்த வைரஸின் பரவல் பிறகு கடந்த ஆண்டு இறுதிகளில் சற்று குறைய ஆரம்பித்தது.
குறிப்பாக நமது இந்தியாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு வருடம் துவக்கும் சமயத்தில் சிறிது குறைவாகவே பதிவானது. ஆனால் தற்போது, கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தினந்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக வட மாநிலங்களில் கொரோனாவினால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாகப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அவரது பகுதியில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். ரவி என்ற பெயர் கொண்ட அவர், இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருப்பவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்று வருகிறார்.
இதுகுறித்து ரவி அளித்த பேட்டியில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, அருகே உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவரை இறக்கிவிட்டதற்கு பிறகு தான் தனக்கு இந்த யோசனை வந்ததாக தெரிவித்துள்ளார்.
ரவி தனது அழைப்புப்பேசி எண்ணை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவிட்டுள்ளார். இதனால் மக்கள் எளிதாக அவரை அணுக முடிகிறது. இந்தியாவில் இதுவரையில் கொரோனாவினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.8 லட்சத்தை கடந்து கொண்டிருக்கிறது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகின்ற இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 23) மஹாராஹ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா, சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட 10 மாநில முதமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி உள்ளார்.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!