Just In
- 53 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கண்டுகொள்ளாத அரசு.. பசியால் தவித்த மக்கள்.. ஓடி வந்து உதவும் பிரபல டயர் நிறுவனம்.. சூப்பர்ல....!
பசியால் தவித்த மக்களுக்கு பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் உணவளித்து பசியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஆரம்பத்தில் சீனாவின், வுஹான் நகரத்தில் மட்டுமே காணப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகமெங்கிலும் பரவி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அதீத பரவும் தன்மைக் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயக்கமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதே நிலைதான் தற்போது இந்தியாவிலும் நீடித்து வருகின்றது.
இந்த இயக்கமற்ற நிலை காரணமாக வருமை கோட்டிற்குள் இருக்கும் அடித்தட்டு மக்கள் மற்றும் தினக் கூலி தொழிலாளர்கள் மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, சொந்த ஊரைவிட்டு வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களே இதில் மிக கடுமையான பின் விளைவுகளை சந்தித்துள்ளனர். மேலும், தற்போது வரை பிரச்னைகளைச் சந்தித்தும் வருகின்றனர்.
கையில் பணமும் இல்லை, தங்குவதற்கு இடமும் இல்லை ஆகையால் சொந்த ஊருக்காவது திரும்பலாம் என அவர்கள் நினைத்தால், அதற்கும் அரசுகள் முட்டுக்கட்டைப் போட்டுள்ளது. 144 தடை (தேசிய ஊரடங்கு) உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதால் அனைத்துவிதமான பொதுபோக்குவரத்துகளும் முடங்கிக்கிடக்கின்றது.
அரசு வாகனங்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்களுக்கும் இதே நிலைதான். எனவே, மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து நகர முடியாத கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையால், பணிக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தஞ்சம் புகுந்த மாநிலங்களிலேயே எந்தவொரு வசதியும் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இத்தகையோருக்கு தேவையான வசதிகளை அவர்கள் பணியாற்றிய அந்தந்த நிறுவனங்களே வழங்க வேண்டும் என ஒரு சில மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இருப்பினும், நிறுவனங்கள் சாராமல் பணியாற்ற வந்த வெளிமாநில தொழிலாளர்கள் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. அதிலும், டெல்லி போன்ற நகரங்களில் பணி புரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களின் நிலை சற்றே கூடுதல் கவலைக் கிடமாக மாறியிருக்கின்றது.
இம்மாதிரியான தொழிலாளர்கள் மற்றும் கிராமப் புற மக்களுக்கு தேவையான உணவை அளிப்பதற்கு ஜேகே வாகன டயர் உற்பத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிறுவனம், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அதன் உற்பத்தி ஆலைகள் இயங்கும் பகுதி மற்றும் சில முக்கிய பிரான்சுகளின் வழியாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தேவையான உணவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு, நாள் ஒன்று 10 ஆயிரம் பேருக்கு உணவளிக்க அது திட்டமிட்டுள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் நீர் உள்ளிடவற்றை வழங்க இருப்பதாகவும் ஜேகே டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்நிறுவனம் 50க்கும் அதிகமான மருத்துவ கேம்ப்கள் மூலம் கிரமாப்புற மக்களுக்கு மருத்து சேவை வழங்கி வருகின்றது. அங்கு கோவிட்19 வைரசைப் பற்றியும் அதன் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான பணியினை நாடு முழுவதும் 5 ஆயிரம் ஜேகே பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
இத்துடன் கூடுதல் சேவை வழங்கும் விதமாக உணவின்றி வாடும் கிராமப் புற மக்கள் மற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கான உணவு திட்டத்தையும் அது தொடங்கியிருக்கின்றது. பல மாநிலங்களில் அரசு சார்பில் வழங்கப்படும் உணவு முறையாக வழங்கப்படுவதில்லை என முகாம்களில் தங்கியிருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் புகார்கூறிய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் சேவை நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சேவை நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த உணவு திட்டமின்றி கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இதுவரை 150-க்கும் அதிகமான கிராமங்களில் வீடு வீடாக சென்று கிருமி நாசினி மற்றும் முகமூடிகளை ஜேகே டயர்ஸ் வழங்கியிருப்பதாக பெருமையுடன் தெரிவிக்கின்றது.
கொரோனா பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகின்ற 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்தது. ஆனால், கொரோனாவின் தீவிர பரவும் தன்மையைப் பார்த்தால் அரசின் இந்த மனநிலை எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் என தெரிகின்றது. ஆகையால், வரும் காலங்களில் ஏழை மற்றும் எளிய மக்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு