Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக மக்கள் தனியாக சாலை அமைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் ஹெஜமாடி கிராமத்தில் சுங்க சாவடி அமைந்துள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்த கிராம மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்ததால், அவர்கள் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், டோல்கேட்டை ஒட்டி கிராம மக்களே தற்போது தனியாக சாலை ஒன்றை அமைத்து விட்டனர். மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியை ஒட்டி இந்த புதிய சாலையை கிராம மக்கள் அமைத்துள்ளனர். அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர், ஹெஜமாடி கிராம மக்களுக்கு சலுகை வழங்கப்பட்டது.
ஆனால் ஹெஜமாடி கிராமத்தில் பயணிகளை ஏற்றிய 4 பேருந்துகளுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே பேருந்துகளுக்கும் சலுகை வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தரப்பில் இருந்து அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதன்பேரில் ஹெஜமாடி கிராமத்தில் பயணிகளை ஏற்ற வரும் பேருந்துகளுக்கு சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம பஞ்சாயத்து அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இதன்பின் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்த கிராம மக்கள், டோல்கேட்டை ஒட்டி தனியாக தற்காலிமான சாலை ஒன்றை அமைத்து விட்டனர். புதிய சாலை அமைக்கப்படுவது குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை. அதற்கு மாறாக எங்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் முதலில் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே நீண்ட நேரமாக வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் இனிமேல் பேருந்துகளுக்கும் சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்தனர். ஆனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்துகள் பயன்படுத்த தொடங்கி விட்டன. உள்ளூர் மக்கள் டோல்கேட் கட்டணம் செலுத்துவதை விரும்பவில்லை. சுதந்திரமாக சென்று வர வேண்டும் என விரும்புகின்றனர்.
எனவே உள்ளூர் கிராம மக்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, இந்த பாஸ்கள் பயனற்றதாக மாறி விட்டதாக உள்ளூர் கிராம மக்கள் கூறுகின்றனர். இந்தியாவின் சில டோல்கேட்களில், உள்ளூர் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் சாலை உள்ளது. ஆனால் ஹெஜமாடி கிராம மக்களுக்கு அந்த வசதி இல்லை.
எனவே ஹெஜமாடியை சேர்ந்த கிராம மக்களே ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து தனியாக சாலை அமைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த என்ன நடக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.