Just In
- 3 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 3 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 4 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 6 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி!
மோசமான சாலை குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இளம் தம்பதியர் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர். இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்றுள்ளது.

விபத்துக்களுக்கு போக்குவரத்து மீறல் என்ற ஒற்றை காரணத்தை கூறிவிட முடியாது. மோசமான சாலைகளும் இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சில இடங்களில் மோசமான சாலைகளால் மக்கள் படும் அவஸ்தைகள் ஒருபுறம் சொல்லி மாளாது. மறுபுறத்தில் உயிர்களை காவு வாங்கும் வகையிலும் சாலைகள் நிலை மோசமாக இருந்து வருகிறது.

மோசமான சாலைகளை செப்பனிடுவதற்கு அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது வழக்கமாக விஷயமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் இதுபோன்ற சாலைகளில் கவனம் செலுத்தவும், உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் சிலர் வித்தியாசமான முயற்சிகளில் இறங்குவதுண்டு.

அண்மையில் பெங்களூரில் மோசமான சாலையின் அவல நிலையை எடுத்துக் காட்ட வேற்று கிரகத்தில் இருப்பது போன்று விண்வெளி உடை அணிந்த வீரர் ஒருவர் நடத்திய ஃபோட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. மறுநாள் காலையிலேயே அவசரமாக அந்த சாலை செப்பனிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த இளம் தம்பதியர் மோசமான சாலை நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் வித்தியாசமான முயற்சியில் இறங்கினர். ஆம், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் குண்டு குழியுமாக இருந்த சாலையின் அவல நிலையை எடுத்துரைக்கும் விதமாக இந்த ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, அந்த குண்டு குழியுமாக இருந்த சாலையிலே அமர்ந்து அவர்கள் விதவிதமான படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரந்துள்ளனர். இந்த படங்கள் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
MOST READ: புதிய ஜாவா பெராக் பைக் விற்பனைக்கு அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

எனினும், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இவர்களது பதிவை பார்த்த பலரும், தங்கள் பகுதியிலும் இவ்வாறுதான் சாலைகள் மோசமாக உள்ளன. இது எல்லா இடத்திற்கும் பொருந்தும் என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.

இந்த பதிவை குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த சாலை சரிசெய்யப்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. உயிரிழப்புகள் உள்ளிட்டவை நிகழ்ந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பது என்பது அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் வழக்கமாகி விட்டது.
Image Courtesy:Roshan Zameer/Facebook