Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஒரே நாளில் மொத்தமா மாத்தீட்டாங்க... கிராம மக்களுக்காக அரசு பஸ்களில் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?
கிராம மக்களுக்காக அரசு பஸ்களில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் வட கிழக்கு பிரிவு, தற்போது பேருந்துகளை கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக மாற்றியுள்ளது. சரியான போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இந்த பேருந்துகள் சேவையாற்றவுள்ளன. இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''மருத்துவமனைகள் அல்லது தடுப்பூசி மையங்கள் இல்லாத சிறிய கிராமங்களுக்காக இந்த பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் 24 மணி நேரத்திற்கு உள்ளாக 2 பேருந்துகளை, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் வட கிழக்கு பிரிவு, தடுப்பூசி மையங்களாக மாற்றியுள்ளது.
மக்கள் பதிவு செய்வதற்கும், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கும், அதன்பின் ஓய்வு எடுப்பதற்கும் தனித்தனி பகுதிகள் இந்த பேருந்துகளில் உள்ளன. தற்போதைய நிலையில் 2 பேருந்துகளை மட்டும்தான் தடுப்பூசி மையங்களாக மாற்றியுள்ளோம். தேவைப்பட்டால் இன்னும் நிறைய பேருந்துகளை இப்படி தடுப்பூசி மையங்களாக மாற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
கோவிட் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். இதற்கு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். போக்குவரத்து கழகத்தில் ஏராளமான ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்னும் பலர் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம்'' என்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைத்து மாநிலங்களும் தற்போது இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றன. தற்போது தடுப்பூசியின் முக்கியத்துவம் பலருக்கும் புரிந்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்துவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மிக விரைவாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு முன்பாக நிறைய பேருக்கு தடுப்பூசி செலுத்தி விட்டால், பாதிப்புகளை குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளும், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தற்போது மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இதற்காக சிறப்பு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், தடுப்பூசி செலுத்தி கொள்வோரில் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிய கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்கோ நகர மேயர் இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களுக்கு, பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!