Just In
- 55 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாக்கடையில் கவிழ்ந்த கார்... மனைவி மீது போலீஸில் கணவன் புகார்! எதற்காக என தெரிந்தால் சிரிக்க கூடாது
சாக்கடையில் கார் கவிழ்ந்ததால், தனது மனைவி மீது கணவர் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (39 வயது). இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் வேலையை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹெப்ரி எனும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 37 வயதாகும் மஞ்சுளாவிற்கு நன்றாக கார் ஓட்ட தெரியும். அதற்கான டிரைவிங் லைசென்ஸையும் மஞ்சுளா வைத்துள்ளார்.
இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நாகராஜ்-மஞ்சுளா தம்பதியினர், ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள சாகர் எனும் ஊருக்கு கடந்த திங்கள் கிழமை சென்றிருந்தனர். இதன்பின் மறுநாள், அதாவது செவ்வாய் கிழமை காலை ஷிவமோகா மாவட்டம் ஹொசநகர் வழியாக அவர்கள் ஹெப்ரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை மஞ்சுளா ஓட்டி வந்தார். இது அவர்களது உறவினர் ஒருவருக்கு சொந்தமான கார் ஆகும். நாகராஜ்-மஞ்சுளா ஆகியோருடன் அவர்களது 6 வயது மகன் இஸான், மஞ்சுளாவின் சகோதரி சுமானா (40 வயது) ஆகியோரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.
மேலும் அவர்களின் உறவினரான சுபர்பா (15 வயது) என்பவரும் காரில் இருந்தார். இந்த காரை மஞ்சுளாதான் ஓட்டி சென்றார். அவரின் கணவரான நாகராஜ் முன்பக்க பாசஞ்சர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் தன் மனைவிக்கு வழிகாட்டியபடி இருந்தார். கார் புறப்பட்ட கொஞ்ச நேரம் அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் ராமச்சந்திராபுரா எனும் இடத்திற்கு அருகே வந்தபோது, காரின் கட்டுப்பாட்டை மஞ்சுளா இழந்ததாக கூறப்படுகிறது. சாலை மோசமாக இருந்ததால், மஞ்சுளா திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் தாறுமாறாக ஓடிய அந்த கார், அங்கிருந்த சாக்கடை கால்வாய் ஒன்றில், தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நடைபெற்ற உடனேயே நாகராஜ் விண்டோவின் மூலமாக வெளியேறினார். மேலும் காருக்குள் சிக்கி கொண்டிருந்தவர்களையும் அவர் காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் இந்த விபத்திற்கு பின்பு நாகராஜ் என்ன செய்தார்? என்பதுதான் ஹைலைட்டே.
அலட்சியமாகவும், கண்மூடித்தனமாகவும் வாகனம் ஓட்டியதாக உள்ளூர் போலீசில் அவர் உடனடியாக தனது மனைவி மீது புகார் அளித்தார். இதன்பேரில் பொறுப்பற்ற வகையிலும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக மஞ்சுளா மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் நடைபெறுவது என்பது ஒன்றும் அரிதான விஷயமல்ல. ஆனால் விபத்திற்கு காரணமான டிரைவர் மீது அதே வாகனத்தில் பயணம் செய்த பயணி புகார் அளிப்பது என்பது நிச்சயமாக ஒரு அரிதான விஷயம்தான். அதிலும் கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அரிதிலும் அரிதான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் விபத்திற்கு காரணமான டிரைவர் தன் மனைவி என்றும் பாராமல், கணவர் அதிரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும், மனைவி என்றும் பார்க்காமல் நாகராஜ் போலீசில் புகார் அளித்திருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்தான். இது அவரது பொறுப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் உள்ள கடமை உணர்ச்சியை காட்டுகிறது.
உண்மையை சொல்வதென்றால், பொறுப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது என்பதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் அரிதான ஒரு விஷயமாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில், மனைவியின் மீதே புகார் அளித்ததன் மூலமாக நாகராஜ் கவனம் பெறுகிறார். இது தொடர்பான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.