Just In
- 37 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 3 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆற்றில் குப்பையை கொட்டிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய அதிகாரிகள்... என்ன தண்டனை குடுத்தாங்க தெரியுமா?
ஆற்றில் குப்பையை கொட்டிய பெண் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆறுகளில் குப்பைகளை கொட்டுவது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்ட விரோதமானது. ஆனால் பலர் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த சூழலில், கர்நாடக மாநிலம் மங்களூரில் பெண் ஒருவர் ஆற்றில் குப்பையை கொட்டினார். இதன் காரணமாக அவரது கார் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆற்றில் குப்பையை கொட்டும் வீடியோ வைரல் ஆனதால், அவர் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இந்த வீடியோவில் ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று, பாலத்தின் மீது நிற்பதை காண முடிகிறது. நேத்ராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நதி புனிதமாக கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஹூண்டாய் வெர்னா காரில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். அதில் ஒருவர் ஆற்றில் குப்பையை வீசினார். இதன்பின் அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காரில் புறப்பட்டு விட்டனர். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதன்பின் அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கியது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதன்பேரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோவில் காரின் பதிவு எண் மிகவும் தெளிவாக தெரிந்ததால், சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டறிவதில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படவில்லை.
அந்த பெண்ணின் மீது மங்களூர் காவல் துறையினர் தற்போது வழக்கும் பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா கார் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நதிகளில் இவ்வாறு குப்பைகளை கொட்டுவது தவறான விஷயமாகும். இதுதவிர தொழிற்சாலை கழிவுகளும் நதியில் கலக்கிறது.
இதன் மூலம் நதி அசுத்தமாகி, அதன் தண்ணீரை பருகுபவர்களுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுகின்றன. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நதிகளை அதிகளவில் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாகதான் பல்வேறு மாநில அரசுகள் நதிகளில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்துள்ளன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில் தற்போது உயரமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பதும் இந்த வேலிகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் மாற்று வழிகளை கண்டறிந்து பலர் ஆறுகளில் தொடர்ந்து குப்பைகளை கொட்டி கொண்டுதான் உள்ளனர்.
இதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி ஆறுகளில் குப்பைகளை கொட்டாதீர்கள். நீங்கள் நதியை மாசுபடுத்துவது கண்டறியப்பட்டால், உங்கள் மீதும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் இயற்கையை பாதுகாக்க முடியும்.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!