Just In
- 24 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!
புல்லட்டை விட அதிகம் சத்தம் வந்த காரணத்தால் கவாஸாகி நிஞ்சா பைக்கை போலீஸார் பறிமுதல் செய்யும் கட்சிகள் வெளியாகியுள்ளது.
வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்குவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கலாச்சாரங்கள் அண்மைக் காலங்களாக பெருகி வருவதால், இதனை தவிர்க்கும் விதமாக உச்சநீதிமன்றம், சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பத்திருந்தது.
அதில், "மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆர்டிஓ அதிகாரிகள் சாலையில் செல்லும் மாடிஃபை வாகனங்களைக் கண்டறிந்து. அவற்றின் உரிமையாளர்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் குழுவாக சென்ற பைக் ரடர்களை அம்மாநில போக்குவரத்து போலீஸார் மடக்கியுள்ளனர். அதில், அதிகம் சத்தம் எழுப்பியதாக கவாஸாகி நிஞ்சா 1000 மாடல் பைக்கை மட்டும் பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், நிஞ்சா 1000 மாடல் பைக்கில் எந்தவொரு மாடிஃபிகேஷனும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், பைக்கை பிடித்த போலீஸார், அதில் அதிகம் சத்தம் வருகிறதே ஏன் எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பைக்கின் உரிமையாளர், "இது லிட்டர்-கிளாஸ் பைக். குறைவான கியரில் செல்லும்போது, சற்று அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தும். அதேசமயம், இந்த சைலன்சரை நாங்கள் மாடிஃபை செய்யவில்லை. இது பைக் நிறுவனம் வழங்கிய ஒன்று" என தெரிவித்தனர்.
இவற்றில், எதிலுமே சமாதானமாகாத அந்த போக்குவரத்து கான்ஸ்டபிள், ஒயர்லெஸ் மூலம் தலைமை காவலரைத் தொடர்பு கொண்டார். அப்போது, பேசிய அவர், நிஞ்சா பைக்கை காவல் நிலையம் அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்ட கவாஸாகி நிஞ்சா 1000 மாடல் பைக்கை தலைமை காவலர் ஆய்வு செய்தார். பின்னர், தன் முன்பாக அந்த வாகனத்தை இயக்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து, பைக்கின் உரிமையாளர் போலீஸாருக்கு முன்பாக, நிஞ்சா பைக்கை 6-ஆவது கியரில் வைத்து இயக்கினார். அப்போது சத்தம் லேசாக வந்துள்ளது. இதன்பின்னர், வாகன ஓட்டிகள் அளித்த விளக்கத்திற்கு பின்னர், எந்தவொரு அபராதமும் இன்றி அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து பாதுகாப்பில் இருக்கும் போலீஸார்கள் இதுபோன்று சிறு தகவல்களை தெரிந்துக்கொள்ளாமல் இருப்பதால், இச்சம்பவத்தைப்போன்றே பல உயர்ரக பைக்குகளின் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தகவல்களைத் தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது தவறில்லை. ஆனால், பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸார் இதுபோன்ற சத்தங்களை அளவெடுக்கும் டெசிபல் கருவியைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது என அந்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் பைக்கர்கள் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனை ஜாட் பிரப்ஜோத் எனும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!