பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கு பின்னர் 2025ம் ஆண்டிற்குள் எனவும், 2023ம் ஆண்டிற்குள் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என முடிவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

இந்த சூழலில் வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில், எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்றால், அதன் விலை குறைவாக இருப்பது அவசியம். வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைவாக இருந்தால், மக்கள் எந்த பெட்ரோலை வாங்குவார்கள்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

இதன் காரணமாகவே ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அதிகளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமென்றால், வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருப்பது அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

பெட்ரோலுடன் அதிகளவு எத்தனாலை கலக்க ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருவதால், வரும் காலங்களில் எத்தனால் தேவை உயரும். எனவே முதலீட்டாளர்களை ஈர்க்க சிறப்பு முயற்சிகள் தேவை என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் எத்தனாலை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

அதாவது ஆங்காங்கே உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற ரீதியில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எத்தனாலை உற்பத்தி செய்யும் புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு முறையே இதற்கு காரணமாக உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

ஆனால் தற்போது வரை இந்த கோரிக்கைக்கு பலன் இல்லை. எனினும் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விலையை ஒன்றிய அரசு குறைக்கும் என்று நம்பலாம். ஏனெனில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Keep Ethanol-blended Fuel Price Lower: Government Panel To Centre. Read in Tamil
Story first published: Thursday, June 10, 2021, 20:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X