Just In
- 8 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 27 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி
இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கு பின்னர் 2025ம் ஆண்டிற்குள் எனவும், 2023ம் ஆண்டிற்குள் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என முடிவாகியுள்ளது.
இந்த சூழலில் வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில், எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்றால், அதன் விலை குறைவாக இருப்பது அவசியம். வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைவாக இருந்தால், மக்கள் எந்த பெட்ரோலை வாங்குவார்கள்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதன் காரணமாகவே ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அதிகளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமென்றால், வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருப்பது அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
பெட்ரோலுடன் அதிகளவு எத்தனாலை கலக்க ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருவதால், வரும் காலங்களில் எத்தனால் தேவை உயரும். எனவே முதலீட்டாளர்களை ஈர்க்க சிறப்பு முயற்சிகள் தேவை என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் எத்தனாலை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆங்காங்கே உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற ரீதியில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எத்தனாலை உற்பத்தி செய்யும் புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு முறையே இதற்கு காரணமாக உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை இந்த கோரிக்கைக்கு பலன் இல்லை. எனினும் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விலையை ஒன்றிய அரசு குறைக்கும் என்று நம்பலாம். ஏனெனில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!