Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி
இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கு பின்னர் 2025ம் ஆண்டிற்குள் எனவும், 2023ம் ஆண்டிற்குள் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என முடிவாகியுள்ளது.
இந்த சூழலில் வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில், எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்றால், அதன் விலை குறைவாக இருப்பது அவசியம். வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைவாக இருந்தால், மக்கள் எந்த பெட்ரோலை வாங்குவார்கள்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதன் காரணமாகவே ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அதிகளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமென்றால், வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருப்பது அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
பெட்ரோலுடன் அதிகளவு எத்தனாலை கலக்க ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருவதால், வரும் காலங்களில் எத்தனால் தேவை உயரும். எனவே முதலீட்டாளர்களை ஈர்க்க சிறப்பு முயற்சிகள் தேவை என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் எத்தனாலை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆங்காங்கே உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற ரீதியில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எத்தனாலை உற்பத்தி செய்யும் புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு முறையே இதற்கு காரணமாக உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை இந்த கோரிக்கைக்கு பலன் இல்லை. எனினும் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விலையை ஒன்றிய அரசு குறைக்கும் என்று நம்பலாம். ஏனெனில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!