Just In
- 52 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி
இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கு பின்னர் 2025ம் ஆண்டிற்குள் எனவும், 2023ம் ஆண்டிற்குள் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என முடிவாகியுள்ளது.
இந்த சூழலில் வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில், எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்றால், அதன் விலை குறைவாக இருப்பது அவசியம். வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைவாக இருந்தால், மக்கள் எந்த பெட்ரோலை வாங்குவார்கள்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதன் காரணமாகவே ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அதிகளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமென்றால், வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருப்பது அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
பெட்ரோலுடன் அதிகளவு எத்தனாலை கலக்க ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருவதால், வரும் காலங்களில் எத்தனால் தேவை உயரும். எனவே முதலீட்டாளர்களை ஈர்க்க சிறப்பு முயற்சிகள் தேவை என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் எத்தனாலை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆங்காங்கே உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற ரீதியில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எத்தனாலை உற்பத்தி செய்யும் புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு முறையே இதற்கு காரணமாக உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை இந்த கோரிக்கைக்கு பலன் இல்லை. எனினும் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விலையை ஒன்றிய அரசு குறைக்கும் என்று நம்பலாம். ஏனெனில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.