Just In
- just now இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
Don't Miss!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...
பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம், மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் குமார் புருஷோத்தமன். இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் செவிலியராக இவர் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு பணிகளில், அருண் குமார் புருஷோத்தமன் முன்களத்தில் நின்று போரிட்டு கொண்டுள்ளார்.
இதற்கு இடையில் அவ்வப்போது கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை பயன்படுத்தி, தன் 10 வயது மகனுக்காக ஜீப் வில்லீஸ் (Jeep Willys) காரின் மினியேச்சர் வெர்ஷனை அவர் புருஷோத்தமன் உருவாக்கியுள்ளார். இந்த குட்டி ஜீப் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சங்களே அதற்கு முக்கிய காரணம்.
இந்த குட்டி ஜீப்பின் எடை சுமார் 75 கிலோ. வெறும் ஏழு மாதங்களில் அருண் குமார் புருஷோத்தமன் இதனை உருவாக்கியுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் வில்லிஸை மனதில் வைத்து, இந்த குட்டி கார் உருவாக்கப்பட்டுள்ளது. தனது அன்றாட பணிகளுக்கு மத்தியில், ஓய்வு நேரத்தின் மூலம், அருண் குமார் புருஷோத்தமன் இதனை உருவாக்கியுள்ளார்.
இந்த குட்டி ஜீப்பில், ராயல் என்பீல்டு பைக்கின் அனலாக் கன்சோல் யூனிட்டை அருண் குமார் புருஷோத்தமன் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் சஸ்பென்ஸன் மெக்கானிசத்தை மேம்படுத்துவதற்காக, உண்மையான ஜீப்பின் மெட்டல் பிளேட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த குட்டி ஜீப்பில், 24V டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்பக்க ஆக்ஸிலுடன் அது இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையான ஜீப் வில்லிஸ் லுக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஃபேப்ரிக் ரூஃப்பை அருண் குமார் புருஷோத்தமன் பயன்படுத்தியுள்ளார். உண்மையான காரை போலவே இதிலும், தேவைப்படும் நேரத்தில் ஃபேப்ரிக் ரூஃப்பை மடித்து வைத்து கொள்ள முடியும். இந்த குட்டி ஜீப்பிற்கு என்று ஸ்பெஷல் டூல்கிட் ஒன்றையும் அருண் குமார் புருஷோத்தமன் உருவாக்கியுள்ளார்.
டிரைவர் இருக்கைக்கு அடியில் இந்த டூல்கிட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்லேம்ப்கள், இன்டிகேட்டர்கள், வைப்பர்கள், ஹாரன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், இன்டீரியர் லைட்கள், பனி விளக்குகள் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் வியூ மிரர்கள் ஆகியவையும் இந்த குட்டி ஜீப்பில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பிரத்யேகமான முதலுதவி பெட்டியும் வைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
ஒவ்வொருவருக்கும் நாம் செய்யும் வேலைகளுடன் சேர்த்து தனித்திறமைகள் ஏதாவது ஒன்று நிச்சயமாக இருக்கும். அப்படி அருண் குமார் புருஷோத்தமனிடம் இருக்கும் திறமைதான் இது. இதுபோன்ற குட்டி வாகனங்களை உருவாக்குவதில், அருண் குமார் புருஷோத்தமன் கை தேர்ந்தவராக விளங்குகிறார். செவிலியர் பணிக்கு மத்தியிலும் அவர் இதனை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
இந்த குட்டி ஜீப்தான் அருண் குமார் புருஷோத்தமனின் முதல் தயாரிப்பு என நினைத்து விட வேண்டாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குட்டி ஆட்டோ ரிக்ஸா ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது குட்டி ஜீப்பும் சேர்ந்துள்ளது. அருண் குமார் கிரியேட்டிவிட்டி என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
மினி ஆட்டோ ரிக்ஸா, ஜீப் என தொடர்ச்சியாக அசத்தி வரும் அருண் குமார் புருஷோத்தமனுக்கு, கேரளாவை கடந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோல் இன்னும் பல்வேறு தயாரிப்புகளை அருண் குமார் புருஷோத்தமன் உருவாக்குவதற்கு நாமும் வாழ்த்துவோம்!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!