Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!
இஸ்லாமியர் ஒருவரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அத்துடன் டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கேரள மாநிலத்தில் அதிசய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆம், அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்று, ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக 3 லிட்டர் பெட்ரோல், டீசலை வழங்கி அசத்தியுள்ளது.
காசர்கோடு மாவட்டத்தின் பெர்லா எனும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில்தான் 3 லிட்டர் எரிபொருள் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இரவு 9.30 மணியளவில் பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.
அப்போது 313 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக தலா 3 லிட்டர் பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டிருந்தது. இந்த பெட்ரோல் பங்க்கை நிர்வகித்து வரும் சித்திக் மடுமூல் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 97.70 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 93.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எனவே அன்றைய தினம் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் மற்றும் டீசலை அந்த பங்க் நிர்வாகம் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்க் சித்திக் மடுமூலின் மூத்த சகோதரர் அப்துல்லா மடுமூலுக்கு சொந்தமானது. அப்துல்லா மடுமூல் அபுதாபியில் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில், சித்திக் மடுமூல் பெட்ரோல் பங்க்கை கவனித்து வருகிறார்.
தற்போதைய நிலையில் ஆட்டோ டிரைவர்கள் இரண்டு காரணங்களால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஊரடங்கு ஆகியவைதான் அந்த 2 காரணங்கள். எனவே ஆட்டோ டிரைவர்களின் சுமையை குறைக்கும் வகையில், இந்த பெட்ரோல் பங்க் நிர்வாகம் இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சித்திக் மடுமூல் கூறுகையில், ''கருணை அடிப்படையில்தான் இதனை நாங்கள் செய்தோம். தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யவில்லை'' என்றார். பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்படுவது தொடர்பான தகவல் அறிந்ததும், ஆட்டோ டிரைவர்கள் பலர் அங்கு ஆர்வத்துடன் திரண்டனர்.
ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தும் கூட வந்திருந்தனர். ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகி விட்டாலும், மீதி 2 லிட்டர்கள் லாபம்தான் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் பெட்ரோல், டீசலை இலவசமாக வழங்கிய பங்க் உரிமையாளருக்கு அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தும் கொண்டனர்.
அத்துடன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிக வரிகள் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பெட்ரோல், டீசலின் விலை குறையும். ஆனால் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா? என்பது சந்தேகமே.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?