Just In
- 7 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 36 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட கார்கள் மூலம் கேரள அரசிற்கு ரூ27.79 கோடி வருவாய்
புதுச்சேரில் பதிவு செய்த காரை கேரளாவில் நிரந்தரமாக பதிவு செய்தவர்களின் வரி வசூல் செய்ததில் கேரள அரசிற்கு ரூ 27.79 கோடி ரூபாய் வருவாய் கிடத்துள்ளது.
புதுச்சேரில் பதிவு செய்த காரை கேரளாவில் நிரந்தரமாக பதிவு செய்தவர்களின் வரி வசூல் செய்ததில் கேரள அரசிற்கு ரூ 27.79 கோடி ரூபாய் வருவாய் கிடத்துள்ளது. இதில் ஒரு காருக்காக ஒருவர் ரூ 60 லட்சம் வரி செலுத்தியுள்ளார்.
வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கேரள மாநிலத்தில் அதிக அளவில் நிரந்தரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசிற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
கேரளாவில் அதிக அளவில் கார் பைக் பிரியர்கள் இருப்பதால் அதிக அளவு விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகள் வாங்கப்படுகின்றன. விலையுர்ந்த வாகனங்களுக்கு வரியும் அதிகமாக இருக்கும்.
கேரளாவில் அதிக அளவில் கார் பைக் பிரியர்கள் இருப்பதால் அதிக அளவு விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகள் வாங்கப்படுகின்றன. விலையுர்ந்த வாகனங்களுக்கு வரியும் அதிகமாக இருக்கும்.
இதனால் கேரள மாநில அரசிற்கு வரி மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமல் போகிறது. இதனால் அரசு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து நடிகை அமலாபால், நடிகர் சுரேஷ்கோபி ஆகியோர் கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தது. இதனால் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. பலர் இவ்வாறன செயலில் ஈடுபட்டிருப்பது பின்னர் தான் தெரியவந்தது.
இதையடுத்து வெளிமாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தி வருவர்கள் தங்கள் காருக்கான வரியை கேரள அரசிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
மேலும் தாங்கள் எந்த மாநிலத்தில் கார் முதலில் பதிவு செய்திருந்தோமோ அந்த மாநிலத்திலிருந்து தடையில்லா சான்று பெறும் சமயத்தில் புதிதாக கேரள பதிவெண்ணும் அந்த காருக்கு வழங்கப்படும் எனவும், இதற்கான கடைசி தேதி ஏப்.30 எனவும் அறிவித்திருந்தது.
இதையடுத்து பலர் தங்கள் வாகனங்களுக்கான வரியை கேராளவில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் செலுத்தி வருகின்றனர். சிலர் இப்பிரச்னை குறித்து கோர்ட்டை அனுகியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ரூ 3 கோடி மதிப்பிலான பென்ட்லி காண்டினெட்டல் ஜிடி காரை கேரளாவை சேர்ந்த ஒவர் வைத்துள்ளார். அவர் தனது காருக்கான வரி தொகையாக ரூ 60 லட்சத்தை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் செலுத்தியுள்ளார்.
இதுவரை எர்ணாகுளம் ஆர்.டிஓ.,வில் மட்டும் இதுவரை வெளி மாநிலத்தில் பதிவு செய்த 34 வாகனங்கள் இங்கு வரி செலுத்தியுள்ளனர். இதன் மூலம் 2.81 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இன்னும் எர்ணாகுளம் பகுதியில் மட்டும் 50 வாகனங்கள் வரி கட்டாமல் ஓட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். அவர்களும் இன்று வந்து வரியை கட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஓட்டு மொத்த கேரளா மாநிலத்தில், வெளிமாநிலத்தில் வாங்கப்பட்ட 338 வாகனங்கள் வாி செலுத்தியுள்ளனர். அதன் மூலம் கேரள அரசிற்கு ரூ 27.79 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழவதும் ஒரே வரி, என்ற திட்டத்தை அறிவித்தார்.
அதாவது நாடு முழவதும் வாங்கப்படும் கமர்ஷியல் வாகனங்களுக்கு ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வருவது தெடார்பாக ஒரு சட்ட மசோதான் முன் மொழிந்தது. ஆனால்இது இதுவரையும் அமலாகவில்லை.
கேரளா விகாரத்தை பொறுத்தவரை வெளி மாநிலத்தில் பதிவு செய்த காரை நிரந்தரமாக கேரளாவில் ஓட்டுபவர்களுக்கே இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஓன் போர்டு கார்கள் கேரளாவிற்குள் தற்காலிகமாக சென்று வர எந்த தடையும் இல்லை.
தற்போது மத்திய அரசு கொண்டு வரும் சட்டட திருத்தத்தில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட காரை வேறு மாநிலத்தில் பயன்படுத்துவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சீர் செய்ய அரசு வழி வகை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?