Just In
- 45 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...
கேரள மாநில அரசு எடுத்துள்ள ஒரு நடவடிக்கை தற்போது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், ஓட்டை, உடைசல் நிலையில் உள்ள பழைய பேருந்துகளை பயணிகளின் சேவையில் ஈடுபடுத்துவதாக மிக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு சில மாநிலங்களின் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், வேறு வழியில்லாமல் பயணிகளுக்கு ஆபத்தான முறையில் பழைய பேருந்துகளை இயக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.
ஆனால் கேரள மாநில அரசு இந்த விஷயத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்துள்ளது. ஆம், கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC - Kerala State Road Transport Corporation) சொந்தமான பழைய பேருந்துகள், தற்போது உணவகங்கள் ஆகவும், பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இதன் மூலம் பழைய பேருந்துகளை பயணிகளுக்கான சேவையில் இருந்து விலக்குவதுடன், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் கேஎஸ்ஆர்டிசி-க்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பழைய பேருந்துகளை விற்பனை செய்வதற்கோ அல்லது வாடகைக்கு விடுவதற்கோ கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் கேஎஸ்ஆர்டிசி-யிடம் 500க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை உணவகங்களாக மாற்றுவதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பேருந்துகள் ஒவ்வொன்றையும் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கேஎஸ்ஆர்டிசி எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்துகளில் விசாலமான இட வசதி காணப்படுகிறது. எனவே அவற்றை மிக எளிதாக உணவகங்களாகவோ அல்லது பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களாகவோ மாற்றி கொள்ள முடியும். அத்துடன் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல், அவற்றை பேருந்து நிலையங்களுக்கு அருகே நிறுத்தி பொருட்களை விற்பனை செய்யவும் முடியும்.
பேருந்துகளை உணவகங்களாக மாற்றுவது என முடிவு செய்து விட்டால், இன்ஜின் உள்ளிட்ட பாகங்களை அகற்றி விட்டு, அவற்றை வேறு ஒரு பேருந்தில் பொருத்தி கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையங்களுக்கு அருகே அவற்றை நிறுத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, அதிகபட்ச தொகையை வழங்க முன்வருபவர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்துகளை வழங்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெண்கள் மேம்பாட்டு கழகம், இந்தியன் காஃபி ஹவுஸ் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய பேருந்துகளை இயக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மிக கடுமையாக மாசுபடுகிறது. எனவே குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவற்றை அழிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பழைய பேருந்துகளை அழிக்காமல், அதே சமயம் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாமல் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக ஓரளவிற்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்பதால், கேரள அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போதைய நிலையில் கேஎஸ்ஆர்டிசியின் பழைய பேருந்தில், முதல் பால் பொருட்கள் விற்பனை நிலையம் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மில்மா நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மில்மா என்பது கேரளா கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (Milma - Kerala Co-operative Milk Marketing Federation) ஆகும். இதே பாணியில் வரும் காலங்களில் இன்னும் ஏராளமான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!