Just In
- 30 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பிரதமருக்கு கூட இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி பந்தா காட்டிய அரசு அதிகாரிகள்... சூப்பர் ஆக்ஸன் எடுத்த போலீஸ்!
பிரதமருக்கு கூட இல்லாத அதிகாரத்தை பயன்படுத்திய அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சிக்கியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விஐபிக்களின் கார்களில் சிகப்பு மற்றும் நீல நிற சைரன் பயன்படுத்துவதை கடந்த 2017ம் ஆண்டு ஒன்றிய அரசு தடை செய்தது. குடியரசு தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் கார்களுக்கும் கூட இது பொருந்தும். இந்தியாவில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி முடிவை ஒன்றிய அரசு எடுத்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த உத்தரவிற்கு இணங்கியுள்ளன. இதனால் அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிக்களின் கார்களில் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை பார்ப்பது என்பது தற்போது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் நிலைமை அப்படி இல்லை.
அங்கு இன்னமும் கூட பலர் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை தங்கள் கார்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்த விதிமுறை மீறல் அதிகமாக நடக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கொல்கத்தா காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறி கார்களில் பொருத்தப்பட்டுள்ள சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை அகற்றுவதற்காக சிறப்பு வாகன தணிக்கையை கொல்கத்தா காவல் துறையினர் மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது முதல் புதன் கிழமை வரையிலான 5 நாட்களில், 314 சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை காவல் துறையினர் அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கொல்கத்தா போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''பக்ரீத் பண்டிகையின்போது பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் கூட 32 அரசாங்க வாகனங்களில் இருந்து சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை நாங்கள் அகற்றினோம்.
இந்த வாகனங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரால் பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த வாகனங்களின் பதிவு எண்களை நாங்கள் குறித்து வைத்துள்ளோம். இந்த அரசு அதிகாரிகளிடம் தற்போது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு ஏதாவது சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து, சட்டத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றனர்.
சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்கள், தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது எனவும் கொல்கத்தா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் சிகப்பு மற்றும் நீல நிற சைரன் பொருத்தப்பட்ட கார்களை நிறுத்துவதற்கு காவல் துறை அதிகாரிகள் சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.
உள்ளே அமர்ந்திருப்பவர் உயர் அதிகாரியாக இருக்கலாம் என்பதே இதற்கு காரணம். மேலும் போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போதும் நிற்காமல் செல்வது போன்ற விதிமுறை மீறல்களில், சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்கள் ஈடுபடுவதாகவும் கூட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இதனால் இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவு கட்டும் நோக்கத்தில்தான், விதிமுறைகளை மீறி சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்களுக்கு எதிராக கொல்கத்தா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் விஐபி கலாச்சாரமும், தவறான பயன்பாடுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!