Just In
- 46 min ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 1 hr ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 2 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 3 hrs ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க
பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பெண் ஒருவரின் லம்போர்கினி காரை அந்நாட்டு காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். அந்த பெண் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 199 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான அபராத தொகையை செலுத்த தவறியதால், அந்த பெண்ணின் லம்போர்கினி கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாஸ்டியா இவ்லீவா என்ற அந்த பிரபலம், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வர்ணணையாளர், நடிகை என இவருக்கு பல முகங்கள் உள்ளன. அபராதம் செலுத்த தவறியதால், காவல் துறையினர் தனது காரை எடுத்து சென்று விட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
நாஸ்டியா இவ்லீவாவை இன்ஸ்டாகிராமில் 18.7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 199 சலான்களும் ஒரே ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த அபராத தொகை எவ்வளவு? என்பது தெரியவில்லை.
நாஸ்டியா இவ்லீவாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது லம்போர்கினி அவென்டெடார் கார் ஆகும். தனது வாழ்க்கையில் விலையுயர்ந்த கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நாஸ்டியா இவ்லீவா கூறியுள்ளார். அத்துடன் அபராத தொகையை செலுத்தி விட்டு காரை மீண்டும் பெறுவதற்கும் அவர் முயற்சி செய்து வருகிறார்.
பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதால், நாஸ்டியா இவ்லீவாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிவேகத்தில் பயணம் செய்தது, சட்ட விரோதமாக வளைவுகளில் திரும்பியது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அடங்கும். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாஸ்டியா இவ்லீவாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லம்போர்கினி அவென்டெடார் கார் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை எஸ், எஸ் ரோட்ஸ்டெர் மற்றும் பிரீமியம் எஸ்விஜே மாடல் ஆகும். லம்போர்கினி அவென்டெடார் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 700 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது.
அதே சமயம் எஸ்விஜே மாடலில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 770 பிஎஸ் பவரை வாரி வழங்கும். அத்துடன் வேரியண்ட்டை பொறுத்து 690 என்எம் முதல் 720 என்எம் வரையிலான டார்க் திறனை இந்த இன்ஜின் உருவாக்கும். இவ்வளவு செயல்திறன் மிக்க காரைதான், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை செலுத்தாமல் தற்போது நாஸ்டியா இவ்லீவா இழந்துள்ளார்.
நீங்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள். நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், காவல் துறையினரிடம் அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமின்றி, சாலை விபத்துக்களில் இருந்து தப்பிக்கலாம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!