Just In
- 15 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 38 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இரவு ரயில்களில் பெண்கள் டிக்கெட் இல்லாமல் செல்லமுடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்கு கூடஇந்த ரூல்ஸ்கள் தெரியாது
இந்திய ரயில்வே சட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்கப் பல சட்டங்கள் உள்ளது. பலருக்கு இந்த சட்டங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இது குறித்த தகவல்களைக் காணலாம் வாருங்கள்
இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கப் பயன்படும் முக்கியமான பொது போக்குவரத்து ரயில். இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிக்கின்றன. அதில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர். இந்த ரயில்கள் மட்டும் இல்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சியே கேள்விக் குறியாக இருந்திருக்கும்.
இந்தியாவில் ஓடும் நீண்ட தூரரயில்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இயக்கப்படுகிறது. ரயிலில் சிலிப்பர்களில் படுத்துத் தூங்கும் வசதி இருப்பதால் பெரும்பாலான பயணிகள் இரவில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.
இரவு பயணம் என்பது எந்த அளவிற்கு இனிமை ஆனதோ அதே அளவிற்கு ஆபத்தானது. பொதுவாக ரயில் நிலையங்கள் எல்லாம் ஊருக்கு வெளிப்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கும். அதனால் இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனிற்கு செல்வது என்பது சற்று பாதுகாப்பு குறைந்தது தான்.
முன்னர் பல நேரங்களில் ரயில் நிலையங்களில் இரவு நேரங்களில் குற்றங்கள் நடந்துள்ளன. அதனால் பெண்கள் தனியாக இரவு நேர ரயில் பயணம் என்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு 1989ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய ரயில்வே சட்டத்தில் பெண்களுக்காகப் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயிலில் பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள என்னென்ன விஷயங்களைச் சட்டம் செய்துள்ளது எனக் காணலாம்
அனைத்து ரயில்களிலும் பெண்கள் மட்டும் தனியாகப் பயணம் செய்யத் தனி பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியில் ஆண்கள் ஏற தடை உள்ளது. அந்த பெட்டியில் பெண்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஆணாக இருந்தால் அவர் ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் போது அதிலிருந்து பெண்கள் இறங்கும் போது தான் டிக்கெட்டை பரிசோதனை செய்ய வேண்டும். ரயில் ஓடும் போது பெண்கள் பெட்டிக்குள் ஆண் டிக்கெட் பரிசோதகர் இருக்கக் கூடாது.
அதன் படி 1989ம் ஆண்டின் இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 139படி ஒரு பெண் தனியாகவோ அல்லது குழந்தையுடனோ ஆண் துணையில்லாமல் இரவில் ரயிலில் பயணிக்கும் போது அவரிடம் ரயில் பயணத்திற்கான டிக்கெட் இல்லை என்றால் அவரை டிக்கெட் அவரை டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலிலிருந்து கீழே இறங்க உத்தரவிட முடியாது. அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த ரயிலில் அவர் டிக்கெட் இல்லாமலேயே செல்லலாம்.
அதே நேரத்தில் இடையில் ஏதேனும் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியிலிருந்தால் அங்குப் பெண் போலீஸ் பணியிலிருந்தால் அவரிடம் வேண்டுமானால் டிக்கெட் இல்லாத குற்றத்திற்காக ஒப்படைக்கலாம். ஆனால் ரயில்வே போலீசில் பெண் போலீசார்கள் இரவில் ரயில் நிலையங்களில் பணியாற்றுவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
அதே போல இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 311ன் படி ரயிலில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் ஏறிவிட்டால் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அவரை அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி வேறு பெட்டியில் ஏறிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளத்தான் முடியும்.
இந்திய ரயில்வே சட்டப் பிரிவு 162ன் படி ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பயணிக்க முடியும். ஆண் குழந்தைகள் 12 வயது வரை இருந்தால் பயணிக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் பெண்கள் பெட்டியில் ஏற அனுமதி கிடையாது.
இது மட்டுமல்ல தற்போது இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் ஓய்வெடுக்கும் அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரயில் நிலையத்தில் ஓய்வறை இருந்தால் அதில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவே செய்யப்பட்டுள்ளது.