Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...
கார் விபத்தில் பிரபல நடிகை ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.
எனவே வாகன ஓட்டிகளுக்கு அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்தபோதும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சில சமயங்களில் புகழ்பெற்ற மனிதர்களும் சாலை விபத்துக்களில் சிக்குகின்றனர். இந்த வகையில் தற்போது புகழ்பெற்ற நடிகை ஒருவரும், அவரது கணவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.
புகழ்பெற்ற பாலிவுட் நடிகை சபானா ஆஷ்மியும், அவரது கணவர் ஜாவேத் அக்தரும்தான் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்து கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 18), மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று சபானா ஆஷ்மியும், ஜாவேத் அக்தரும், டாடா சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி காரில் பயணித்து கொண்டிருந்தனர்.
கமலேஷ் காமத் என்பவர் இந்த காரை ஓட்டி சென்றார். மும்பையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் காலாப்பூர் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் கார் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜாவேத் அக்தருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் சபானா ஆஷ்மிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் ராஜேஷ் பாண்டுராங் ஷிண்டே ராய்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபானா ஆஷ்மியின் கார் டிரைவர் கமலேஷ் காமத் பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டி வந்ததாக லாரி டிரைவர் ராஜேஷ் பாண்டுராங் ஷிண்டே போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கார் டிரைவர் கமலேஷ் காமத் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராய்காட் போலீஸ் எஸ்பி பரஸ்கார் கூறுகையில், ''கண்மூடித்தனமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டிய காரணத்தால், டிரைவர் கமலேஷ் காமத் மீது நாங்கள் ஐபிசி செக்ஸன்கள் 279 மற்றும் 337-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆனால் கார் டிரைவர் கமலேஷ் காமத்தை நாங்கள் இன்னும் கைது செய்யவில்லை.
கமலேஷ் காமத்திற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு விட்டது. இதன் மூலம் அவர் கார் ஓட்டிய போது மது அருந்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது'' என்றார். ஆனால் டாடா சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி காரில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த விபத்து நடைபெற்ற மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் தினமும் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பல விபத்துக்களில் உயிர் பலி நிகழ்கிறது. அதிவேகம்தான் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது. குறிப்பாக கார் டிரைவர்கள்தான் அதிவேகத்தில் பயணம் செய்து விபத்துக்களில் சிக்குகின்றனர்.
எனவே அதிவேகத்தில் பயணம் செய்வதை இன்றோடு விட்டு விடுங்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம்.
இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் முறையாக பின்பற்றினால், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்புவதோடு, சாலை விபத்துக்களில் சிக்காமலும் தப்பி விடலாம்.
Image Courtesy: Tushar Kevadiya/Facebook
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க