Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆட்டோவை பூங்காவாக மாற்றிய உரிமையாளர்... காரணம் என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...
புனே நகரை சேர்ந்த உரிமையாளர் ஒருவர், தன் ஆட்டோவை பூங்காவாக மாற்றம் செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.
மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி. தற்போது 45 வயதாகும் இவர், சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்துள்ளார். அதனை வாடகைக்கு இயக்கி வரும் இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி, இயற்கை மீது தீராக்காதல் கொண்டவர்.
ஆனால் இன்றைய சூழலில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல், நாளுக்கு நாள் மிக கடுமையாக பாதிப்படைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலிக்கு இது பெருங்கவலையை ஏற்படுத்தியது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என அவர் முடிவு எடுத்தார். ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரால் பெரிதாக என்ன சாதித்து விட முடியும்? என அவர் தளர்ந்து விடவில்லை.
அப்போது அவரது மனதில் உதித்த சிந்தனைதான் பூங்கா ஆட்டோ. ஆம், இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி, தனது ஆட்டோவை ஒரு பூங்காவாக மாற்றி விட்டார். இந்த ஆட்டோவில் பயணம் செய்தால், நிசப்தமான வனாந்திரத்தில் இருப்பது போன்ற உணர்வு நிச்சயம் ஏற்படும்.
இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியின் இயற்கை மீதான காதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கவலை ஆகியவை, அவரது ஆட்டோவில் எதிரொலிக்கின்றன. இந்த ஆட்டோவின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை, செயற்கை புற்களால் கவர் செய்துள்ளார் இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி.
இருக்கைகளும் இதற்கு விதி விலக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கைகள் முழுவதும் செயற்கை புற்களால் வேயப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ முழுக்க பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியின் பூங்கா ஆட்டோவினுடைய முக்கியமான சிறப்பம்சமே பறவைகள் மற்றும் விலங்குகள் போன்று ஒலி எழுப்பும் ஆடியோ சிஸ்டம்தான். இந்த ஸ்பெஷல் ஆடியோ சிஸ்டம் எழுப்பும் ஒலியானது, அச்சு அசலாக பறவை, விலங்குகளின் சப்தம் போன்றே உள்ளது.
இதுதவிர பூக்கள், ரம்மியமான கலர் விளக்குகள் என இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியின் பூங்கா ஆட்டோ அமர்க்களப்படுத்துக்கிறது. இந்த ஆட்டோவில் பயணம் செய்தால், அமைதியான வனாந்திரத்திற்கு சென்று திரும்பிய உணர்வு மனதில் அப்படியே நிலைத்து நின்று விடுகிறது.
ஆட்டோவை பூங்காவாக மாற்றும் பணிகள் 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்தான் நிறைவடைந்தன. மஹாராஷ்டிரா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, புனே மக்கள் இந்த பூங்கா ஆட்டோவை வியப்புடன் பார்த்து செல்கின்றனர். பயணிகள் உற்சாகமாக பயணித்து வருகின்றனர்.
பூங்கா ஆட்டோ குறித்து இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி கூறுகையில், ''நான் குழந்தை பருவத்தில் இருந்தே இயற்கை மீது தீராக்காதல் கொண்டவன். இயற்கையை பாதுகாக்காவிட்டால், வருங்காலத்தில் நாம் பெரும் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியது வரும்.
எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பூங்கா ஆட்டோவை நான் உருவாக்கினேன். 'டிரிப்' முடிந்து ஒவ்வொரு பயணிகளை இறக்கி விடும்போதும், இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.
ஆட்டோவை பூங்காவாக மாற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவானது. இதற்காக நான் யாரிடமும் உதவி கேட்கவே இல்லை. அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் செலவானது பற்றி கவலைப்படவும் இல்லை. இந்த செலவு தகுதியானதுதான். மக்கள் என் ஆட்டோவை பார்க்கின்றனர். இதில், பயணிக்கின்றனர்.
இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. இது ஒன்றே போதும். இது எனக்கு அருமையான உணர்வை தருகிறது'' என்றார். தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலரும், இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?