Just In
- 13 min ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 31 min ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
உள்நாட்டிலேய தயாரிக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்!
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் சென்னையிலுள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன.
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் சென்னையிலுள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில் பெட்டிகள் மேலை நாடுகளுக்கு இணையான தரத்தில் இருககும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ஐரோப்பிய ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து உரிமம் பெற்று அதிவேக ரயில் பெட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகள் சதாப்தி, ராஜ்தானி மற்றும் அதிவிரைவு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அதிவேக ரயில் பெட்டிகளை சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்க இருக்கிறது இந்திய ரயில்வேத் துறை. இந்த அதிவேக ரயில் பெட்டிகள், மேலை நாடுகளுக்கு இணையான தரத்துடன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இந்த அதிவேக ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் ரூ.6 கோடி மதிப்புடையது. ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களின் உரிமம் பெற்று இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை இவை 40 சதவீதம் குறைவான விலை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு ரயிலும் ரூ.100 கோடி மதிப்புடையதாக இருக்கும்.
அதேநேரத்தில், தரத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. அலுமினிய பாடி பேனல்களுடன் இலகு எடை கொண்டதாக இந்த ரயில்கள் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
இந்த ரயில் பெட்டிகளின் மற்றொரு விசேஷம் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். சேர் கார் வசதியுடன் வடிவமைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகளில் நெருக்கடி இல்லாத பயண அனுபவத்தை பெற இயலும். பயணிகளுக்கு தேவையான நவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
ஒவ்வொரு அதிவேக ரயிலும் 16 பெட்டிகள் கொண்டதாக உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. படிப்படியாக அனைத்து பிரிமியம் சதாப்தி ரயில்களிலும் இந்த நவீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த ரயில் பெட்டிகள் கொண்ட அதிவேக ரயில்கள் அதிக பிக்கப் கொண்டதாகவும், அதிர்வுகள் இல்லாமல் மிக சொகுசானதாகவும் இருக்கும். வளைவுகளில் வேகத்தை குறைக்காமல் செல்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறையும்.
அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது அலுங்கல் குலுங்கல் அதிகம் இல்லாமல் செல்லும் விதத்தில் மிக நவீன சஸ்பென்ஷன் மற்றும் ஆக்சில்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
வரும் ஜூன் மாதம் இந்த அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அப்போது, இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!