Just In
- 19 min ago இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரில்லா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
- 1 hr ago வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- 1 hr ago ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
- 6 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
Don't Miss!
- News சென்னையில் லிஸ்ட் போட்டு பாஜகவே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தாக்கிய நிர்மலா சீதாராமனின் கணவர்!
- Finance கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தமானது..? இதை உருவாக்கியது யார்..?
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: ஏப்ரல் 24 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்..
- Movies அடக்கடவுளே.. எம்ஜிஆரை தொட முயற்சி செய்து அடி வாங்கியிருக்கேன்.. ராமராஜன் சொன்ன பகீர் தகவல்!
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
நம்ம தமிழ்நாட்டில்தான்... ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்... எந்த ஊரில் தெரியுமா?
ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மகிழ்வித்து மகிழ் என்ற இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ இறைச்சி வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத சிறப்பு சலுகையாக இந்த சலுகையை அறிவித்துள்ளனர். இங்கு ஒரு கிலோ இறைச்சி வாங்கினால், ஒரு டோக்கன் வழங்கப்படும்.
அதனை வைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொள்ளலாம். இந்த சலுகையை ஆடி மாதம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சலுகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம், பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பது போன்ற சலுகைகள் பல முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் திருமண விழாக்களில் மணமக்களுக்கு பெட்ரோல் பல முறை பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையில் அதனை மணமக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். உலகிலேயே பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரி காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தற்போது கூட வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது வாகன ஓட்டிகளுடன், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் கூட, அதன் முழுமையான பலன் இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை.
எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி கொண்டே உள்ளனர். அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது கொண்டு வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் வருமான இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர பல்வேறு மாநில அரசுகள் விரும்பவில்லை.
அத்துடன் வரிகளும் குறைக்கப்படாமல் இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து வாகன ஓட்டிகள் சிந்தித்து வருகின்றனர். அதற்கேற்ப எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சார்பில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுவதால், வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
-
இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
-
எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விஃப்ட் மே 2வது வாரத்துக்குள் அறிமுகமாக போகுதா!