Just In
- 1 hr ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 2 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 4 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 9 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Movies ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா?
மஹாராஷ்டிரா காவல் துறை செய்திருக்கும் அதிரடி பற்றிய தகவலை அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்பதால், ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மஹாராஷ்டிராவில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார். அத்துடன் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 11 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து, விதிமுறைகளை மீறியதாக, ஐபிசி செக்ஸன் 188-ன் கீழ் (அரசு அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாதது) மொத்தம் 1,61,821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 29,990 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 89,459 வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர முறைகேடான போக்குவரத்து தொடர்பாக 1,335 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால், தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மும்பையில் புதிய விதிமுறைகளை காவல் துறையினர் கொண்டு வந்துள்ளனர். இதன்படி உரிய காரணம் இல்லாமல், ஒருவர் தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் செல்லக்கூடாது. அப்படி சென்றால், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஆனால் அலுவலகம் செல்வோர் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதிலும் காவல் துறையினர் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடம் இல்லை என்பதாலும், வாகனங்கள் திருடப்பட்டு விடுமோ? என்ற அச்சம் காரணமாகவும், காவல் துறையினர் வாகனங்களை அவசர அவசரமாக உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டாலும் கூட, போலீசாரின் நடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
உரிய காரணம் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே அவசியம் இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. இது காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, கொரோனா தொற்றில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
Note: Images used are for representational purpose only.
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!