Just In
- 34 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க
கொரோனா வைரஸால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே செய்த காரியம், சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொத்து கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கி வருவதுடன், பொருளாதார ரீதியில் மிக கடுமையான பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பொதுமக்கள் பலர் வேலையிழந்துள்ளனர். இன்னும் பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, வருவாய் இழப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகளும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
எனவே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய காரை வாங்கும் திட்டத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார். இதேபோல் மஹாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும், புதிய கார் வாங்கும் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார்.
குடியரசு தலைவர் மற்றும் மஹாராஷ்டிரா மாநில கவர்னர் ஆகியோரின் இந்த முடிவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், மஹாராஷ்டிரா மாநில அரசு எடுத்துள்ள ஒரு முடிவு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம் மஹாராஷ்டிராதான்.
அம்மாநில தலைநகர் மும்பை, கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மஹாராஷ்டிரா அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி ஒரு இக்கட்டான சூழல் நிலவி வரும் சமயத்தில், நான்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, ஆறு புதிய கார்களை வாங்குவதற்கு மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் 1.37 கோடி ரூபாய் ஆகும். மஹாராஷ்டிரா மாநில அரசு வாங்க முடிவு செய்திருக்கும் ஆறு கார்களுமே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாதான்.
இந்திய அரசியல்வாதிகள் விரும்பி பயன்படுத்தும் கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, சௌகரியமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த காராக இருப்பதே இதற்கு காரணம். மஹாராஷ்டிரா மாநில அரசு வாங்க முடிவெடுத்திருக்கும் ஒரு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை 22.83 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், துணை அமைச்சர் பாச்சு காடு, விளையாட்டு துறை அமைச்சர் சுனில் கேதார், துணை அமைச்சர் அதிதி தட்கரே ஆகிய நான்கு பேருக்கும் தலா ஒரு கார் வழங்கப்படவுள்ளது. இதுதவிர பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறையின் கூடுதல் தலைமை செயலாளரின் பயன்பாட்டிற்கு ஒரு கார் வழங்கப்படவுள்ளது.
அதே சமயம் 6வது கார் அந்த துறையின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய கார்களை வாங்குவதற்காக சிறப்பு அனுமதி கொடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக முக்கிய எதிர்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தற்போதைய இக்கட்டான சூழலில், அமைச்சர்களுக்கு வாகனங்களை வாங்குவது, அரசின் முன்னுரிமையாக எப்படி இருக்க முடியும்?
கோவிட்-19 வைரஸ் உண்டாக்கிய நெருக்கடி காரணமாக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, சம்பளத்தை ஒத்தி வைத்து வருவதாக கூறப்படும் சமயத்தில், வாகனங்களை வாங்குவது என்பது அரசின் முன்னுரிமையாக இருக்க முடியாது'' என்றார். இந்த விவகாரம் தற்போது மஹாராஷ்டிரா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
உண்மையில் புதிய வாகனங்களை வாங்கும் முடிவை பொதுமக்கள் ஏராளமானோர் தற்போது தள்ளி போட்டு வருகின்றனர். வேலையிழப்பு மற்றும் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முதலீடுகளில் மக்கள் கவனமாக இருக்கின்றனர். இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது.
ஆனால் வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது என மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இந்த கொரோனா அச்சம் காரணமாக வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!