Just In
- 58 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெள்ளம் சூழ்ந்த நிலையில் மாற்றி யோசித்த மக்கள்! செல்போனை எப்படி சார்ஜ் செய்தனர் தெரியுமா? மாஸ் ஐடியா
வெள்ளம் சூழ்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் மாற்றி யோசித்துள்ளனர். அவர்கள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களால் கேரள மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால், நீலகிரி மாவட்டம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
பேய் மழையில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலமும் தப்பவில்லை. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்கள்தான் கன மழையில் சிக்க தவித்து வருகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் மழையால் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. கோலாப்பூர் மற்றும் சாங்லி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்துடன் அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி இல்லாத காரணத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுபோன்ற அவசர கால சூழ்நிலைகளில் செல்போன்களின் மிகவும் அவசியம். ஆனால் மின்சாரம் இல்லாமல் செல்போனை எப்படி சார்ஜ் செய்வது? அதான் பவர் பேங்க் இருக்கிறதே என நீங்கள் யோசிக்கலாம். ஒரு வேளை பவர் பேங்க்கும் டிரை ஆகி விட்டால்? இப்படியான ஒரு இக்கட்டான சூழலில்தான் கோலாப்பூர் மற்றும் சாங்லி மக்கள் தற்போது சிக்கி கொண்டுள்ளனர்.
எனினும் தங்கள் செல்போனை உயிர்ப்புடன் வைத்திருக்க கோலப்பூர் மக்கள் சற்று மாற்றி யோசித்துள்ளனர். வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மோட்டார்சைக்கிள் பேட்டரி மூலமாக மக்கள் தங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவது போல் அந்த புகைப்படம் உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிளின் பேட்டரியில் இருந்து ஏராளமான செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவது போல அந்த புகைப்படம் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் கோலாப்பூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் இல்லாத காரணத்தால் செல்போனை சார்ஜ் செய்ய மக்கள் இந்த வழிமுறையை கையாண்டிருப்பதாக தெரிகிறது.
எனினும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடம் பிரகாசமாக இருப்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. ஒருவேளை ஜெனரேட்டர் வசதி அங்கு இருந்ததா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகததால், இது புரளியாக இருக்குமோ? என்றும் கூறப்படுகிறது.
ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இது நடைமுறையில் சாத்தியமாக கூடிய விஷயமே. ஆனால் அதற்கு கொஞ்சம் உழைக்க வேண்டும். இந்த படம் ஒருவேளை உண்மையாக இருந்தால், இதுபோன்ற மிக மோசமான சூழ்நிலையிலும் புத்தி கூர்மையுடன் யோசித்த மக்களுக்கு நிச்சயம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.
சமூக வலை தளங்களில் நெட்டிசன்களும் பலரும் கூட இது ஒரு சிறப்பான ஐடியா என்றுதான் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.