Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!
முழு முடக்கத்தை நோக்கி மஹாராஷ்டிரா அரசு நகர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் உதவி தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் ரிக்ஷா டிரைவர்களுக்கும் உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாம் அலை பரவல் என்றழைக்கப்படும் இது கொத்து கொத்தாக மனிதர்களை பாதித்து வருகின்றது. முன்னதாக நூறு, ஐநூறு மற்றும் ஒரு சில ஆயிரங்கள் என மட்டுமே காணப்பட்ட பரவலின் எண்ணிக்கை தற்போது ஐயாயிரம், ஆறாயிரம் மற்றும் பத்தாயிரம் என மிகக் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடங்கியிருக்கின்றது. இதில், மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் வைரஸ் பரவல் தொற்று காணப்படுகின்றது. ஆகையால், மாநில அரசு 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மிக சமீபத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேர பொதுமுடக்கத்தை அரசு அறிவித்திருந்தது. இது கை கொடுக்காதநிலையில் தற்போது மீண்டும் பொதுமுடக்கத்தை நோக்கி மாநிலம் நகர்ந்துள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில் மக்களுக்கும் உதவும் வகையில் கணிசமான சிறப்பு உதவி அறிவிப்புகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாநிலத்தில் உள்ள ஏழு கோடி மக்களுக்கு இலவசமாக 3கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசையை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, இயலாத மற்றும் எளிய மக்களுக்காக இரண்டு இலட்சம் உணவு பொட்டலங்களை தயார் செய்து வழங்கும்படியும் அவர் கூறியிருக்கின்றார்.
இவற்றை விட மிக முக்கியமாக ஏற்கனவே வறுமையின் விளிம்பில் இருக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என இரு மாதங்களுக்கு வழங்க அவர் கூறியிருக்கின்றார். மாநிலத்தில் பல லட்ச ஆட்டோ டிரைவர்கள் இருக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை தற்போதைய பொதுமுடக்கம் பெரிதும் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுக்களின் விலையுயர்வு அவர்களை பெரிதும் பாதித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் பொதுமுடக்கம் ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கையை முடக்கிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உதவித் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது ஆட்டோ டிரைவர்களின் பெரும் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கணிசமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதே அரசின் எண்ணமாகும். கடந்த காலங்களில் வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு ரூபாய்கூட வருமானம் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். அதுமாதிரியான இன்னல்களை ஆட்டோ டிரைவர்கள் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயிரம் ரூபாய் உதவித் தொகை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி வயது முதிர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து, கட்டுமான பணிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்பட இருப்பதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான கட்டுமான பணியாளர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து சாலையோர மற்றும் ரிக்ஷா ஆட்டோ ஓட்டுநர்களும் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநிலத்தில் வசதித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையிலேயே உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற உதவிகளுக்காக ரூ. 5,476 கோடியை உத்தவ் தாக்கரே அரசு ஒதுக்கியுள்ளது. "கடந்த முறை பூட்டுதல் அறிவித்தபோது மக்கள் என்ன மாதிரியான அவலநிலைகளைச் சந்தித்தனர் என்பதை இந்த அரசு தெளிவாக பார்த்தது. அந்தநிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே உணவு பொட்டலங்கள் மற்றும் உதவித் தொகையை அரசு அறிவித்திருக்கின்றது" என மாநிலத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!