Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...
ரயில் வந்து கொண்டிருந்த நேரத்தில், கார் ஒன்று தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. நெஞ்சை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த திக்... திக்... வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் நாடு இந்தியா (அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன). இந்திய ரயில்வே துறையில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரம் ஒன்றில், மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் ஒன்று எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. சக்தி வாய்ந்த காராக கருதப்பட்டாலும், தண்டவாளத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த கார் திணறியது.
அப்போது அவ்வழியாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காரின் டிரைவர் தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்து பார்த்தார். இருந்தபோதும் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுக்க முடியவில்லை.
எனவே அங்கிருந்த மக்கள் உடனடியாக உதவி செய்ய ஓடி வந்தனர். தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அவர்கள் காரை தள்ளி பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்போதும் கார் வெளியே வரவில்லை. அந்த நேரத்தில் ரயில் நெருங்கி வந்திருந்தது.
இதனால் பதற்றம் அடைந்த மக்கள், ரயிலை நிறுத்தும்படி அதன் டிரைவருக்கு வேகமாக சைகை காட்டினர். அதிர்ஷ்டவசமாக இதனை புரிந்து கொண்ட ரயிலின் டிரைவர் ஒரு வழியாக ரயிலை நிறுத்தி விட்டார். வேகமாக பயணித்து கொண்டிருக்கும் ஒரு ரயிலை அப்படியே நிறுத்துவது அபாயகரமானது.
அப்படி நிறுத்தினால் ரயில் தடம் புரண்டு விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் ரயிலின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தண்டவாளத்தில் கார் சிக்கி கொண்டிருப்பதை, அந்த ரயிலின் டிரைவர் தொலைவில் இருந்தே பார்த்திருக்க கூடும் என கருதப்படுகிறது.
இதன்மூலம் அவர் படிப்படியாக வேகத்தை குறைத்திருக்கலாம். அல்லது சிறிய நகரம் என்பதால், அவர் ரயிலை மிகவும் மெதுவாகவே இயக்கி வந்திருக்கலாம். எது எப்படியோ அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விட்டது.
ரயில் நிறுத்தப்பட்ட பின்புதான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதன்பின் கூடுதலாக சிலர் வந்து காரை மீட்க உதவி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பே கார் மீட்கப்பட்டது. அதுவரை ரயில் மிகவும் பொறுமையாக அங்கேயே காத்து கொண்டிருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தனர். சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
தண்டவாளத்தில் இருந்து கார் மீண்டு வருவதை வீடியோவின் 2வது பகுதியில் பார்க்க முடிகிறது. நிச்சயமாக இதன்பின்புதான் காரின் டிரைவர் நிம்மதி அடைந்திருப்பார். குறுக்கு வழியில் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த பாதையை தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவத்தின் மூலமாக அவர் பாடம் கற்று கொண்டிருப்பார். இந்திய ரயில்வே துறையானது, உள்கட்டமைப்பு தேவைகளை வேகமாக பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் இதுபோன்ற 'ஷார்ட் கட்ஸ்' மீதுதான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் (டிரெயின்-18) சேவையை பிரதமர் மோடி இன்று (பிப்.15) தொடங்கி வைத்தார். சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட டிரெயின்-18 ரயில், டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது. இப்படிப்பட்ட வேகத்தில் வரும் ஒரு ரயில், தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார் உள்ளிட்ட சிறிய இலகுரக வாகனங்கள் மீது மோதினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும்.
எனவேதான் இத்தகைய 'ஷார்ட் கட்ஸ்' மீது இந்திய ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் மற்ற போக்குவரத்து முறைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களை மிச்சம் பிடிப்பதற்காக, குறுக்கு வழியை தேர்வு செய்தால் ஆபத்துதான் மிஞ்சும்.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!