Just In
- 15 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 37 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!
எம்ஜி நிறுவனத்தின் புத்தம் புதிய ஹெக்டர் காரைப் போலவே மஹிந்திரா நிறவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான கேயூவி100 சிறிய ரக எஸ்யூவி கார் தீ விபத்தில் சிக்கி நாசமாகியுள்ளது.
புதிதாக இந்தியாவில் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப் போடு போட்டிக் கொண்டிருக்கும் எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மாடலான ஹெக்டர் எஸ்யூவி ரக கார் அண்மையில் தீயில் கருகி நாசமாகியது.
இந்த கார் எப்படி தீ விபத்தில் சிக்கியது என்பதுகுறித்த தகவல் சமீபத்திலேயே வெளியுலகிற்கு தெரியவந்தது.
இந்த சம்பவத்தின் வெப்பமே இன்னும் மறையாத நிலையில், புதிய தீ விபத்துகுறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த புகைப்படத்தை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய (ஜனவரி 27) தினம் ஹிமாச்சல பிரதேசத்தில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் கேயூவி100 கார்தான் இந்த தீ விபத்தில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணித்த தம்பதிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு காயமுமின்றி தப்பியுள்ளனர்.
ஷிம்லாவைச் சேர்ந்த கவுரவ் சிங் மற்றும் சுனில் தத் என்ற தம்பதிகள் ஹிமாச்சலத்தை நோக்கி பயணிக்கும் போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் குலு மாவட்டத்தில் உள்ள அணி என்ற பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும்போது காரின் எஞ்ஜின்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேற ஆரம்பித்தது.
இதனைக் கண்டு அதிர்ந்துபோன தம்பதியினர் உடனடியாக காரை விட்டு வெளியேறினர். அவர்கள் இறங்கிய சில விநாடிகளிலேயே எஞ்ஜினில் இருந்து தீ பிழம்பு வெளியேற ஆரம்பித்து. அது மலமலவென பரவி காரின் எஞ்ஜின் பகுதியை பதம் பார்க்க ஆரம்பித்தது.
தொடர்ந்து, எஞ்ஜினில் பிடித்த தீ முன்னிருக்கை மற்றும் காரின் அனைத்து பகுதியிலும் பரவி அதற்கு இரையாக்கியது. இதனால், கார் முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடாக மாறியது.
அதிர்ஷ்டவசமாக முன்னதாகவே சுதாரித்துக் கொண்டு காரை விட்டு வெளியேறியதன் காரணத்தினால் தம்பதிகள் இருவரும் சிறு காயமுமின்றி தப்பினர்.
திடீரென காரில் எவ்வாறு தீ பிடித்தது என்பதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. வாகனத்தின் உரிமையாளருக்கும் அதுகுறித்த அறியாத வண்ணமே இருக்கின்றது.
சம்பவம்குறித்து கேயூவி 100 காரின் உரிமையாளரான கவுரவ் சிங்க் மற்றும் அவரது மனைவி சுனில் தத் அளித்த தகவலின் பேரில் வந்த போலீஸார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் வருவதற்குள்ளாக தீ முழுவதுமாக பரவி கார் எரிந்து நாசமாகியதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
தற்போது தீ விபத்தில் சிக்கியிருக்கும் கேயூவி 100 காரின் வடிவமைப்பில்தான் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஆகையால், விரைவில் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த குறைந்த சிறிய ரக எஸ்யூவி கார் எரிபொருள் தேர்வு மட்டுமல்லாமல் மின் மோட்டார் தேர்விலும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனம், இந்த இ கேயூவி100 என்றழைக்கப்படும் மின்சார காரை மிகவும் சவாலான விலையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கூறியதாவது, "எலெக்ட்ரிக் கார் சந்தையின் போக்கை மாற்றும் வகையில் ரூ. 9 லட்சத்திற்குள் புதிய மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
பவன் கோயங்காவின் இந்த கூற்றின்படி, மஹிந்திரா இ கேயூவி 100 மாடல் எலெக்ட்ரிக் கார் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, இந்திய மின்சார வாகன சந்தையில் இந்த கார் தரமான சம்பவத்தை நிகழ்த்தும் என்றும் கூறப்படுகின்றது.
மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், தற்போது தீ விபத்து சிக்கியிருக்கும் கேயூவி 100 எஸ்யூவி காருக்கும் கணிசமான டிமாண்ட் இந்திய சந்தையில் நிலவி வருகின்றது. இதற்கு கருப்பு புள்ளி ஏற்படுத்தும் விதமாக இந்த திடீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!