Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியர்களே கவலை வேண்டாம்.. தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. வாயை பிளக்க வைத்த மஹிந்திரா!!
இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் மலிவு விலை உயிர்காக்கும் கருவியை தயார் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் போரில் பல்வேறு முக்கியமான உதவிகளைச் செய்து வருகின்றது.
குறிப்பாக, நிதியுதவி வழங்குதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அது செய்து வருகின்றது.
இதுமட்டுமின்றி, கிருமி தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான கவசங்களையும் அது தயாரித்து வருகின்றது.
அந்தவகையில், முகமூடி, சேனிடைசர் எனப்படும் கிருமி நாசினி மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் கண்ணாடி மாஸ்க்குகள் உள்ளிட்ட ஏராளாமான மருத்துவ கருவிகளை அது தயாரித்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனோ தொற்றுடையவர்களை பாதுகாப்பதில் தலையாய கருவியாக கருதப்படும் வென்டிலேட்டரையும் அது தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வென்டிலேட்டரை அது ஏற்கனவே மாதிரி தோற்றத்தில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனை உருவாக்க தொடங்கிய வெறும் 48 மணி நேரத்தில் மஹிந்திரா நிறுவனம் அதனை வடிவமைத்து அசத்தியது. அதுமட்டுமின்றி, பல லட்சம் ரூபாய் மதிப்பில் வென்டிலேட்டர்கள் விற்பனைச் செய்யப்பட்டு வரும் வேலையில், மஹிந்திரா நிறுவனம் அதனை வெறும் ரூ. 7,500 என்ற மலிவு விலையில் உருவாக்கி இந்தியாவையே பெருமையடைச் செய்தது.
இந்நிலையில், இந்த மலிவு விலை வென்டிலேட்டருக்கு சில அப்கிரேஷன்களை வழங்கி மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த மலிவு விலை வென்டிலேட்டருக்கு ஏர்100 என்ற பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த பெயரை அந்நிறுவனம் வைத்திருக்கின்றது.
இந்த உயிர்காக்கும் எந்திரத்தை உருவாக்க கடந்த 18 நாட்களாக இரவு, பகல் பாராமல் (24*7) அந்நிறுவனம் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கான பணியில் 10 மருத்துர்கள் மற்றும் பயோமெடிக்கல் பொறியியாளர்கள் பங்கேற்றிருந்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவலை டுவிட்டர் பதிவுமூலம் பவன் கோயன்கா தெரிவித்துள்ளார். மேலும், வென்டிலேட்டர் அறிமுகத்தையும், அதன் அப்கிரேஷனைக் குறித்த தகவலையும் டுவிட் பதிவு மூலமே அவர் உறுதி செய்திருக்கின்றார். தொடர்ந்து, தற்போது 20 வென்டிலேட்டர் கருவிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுவாக வென்டிலேட்டர் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், மஹிந்திரா நிறுவனம் இந்த கருவியை வெறும் ரூ. 7,500-க்கே மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்த வென்டிலேட்டர்கள் மூலம் ஏழை எளியோர் என அனைவராலும் பயன் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்திரா நிறுவனம் இந்த கருவியை அறிமுகம் செய்தபோது, இந்த கருவி என்னுடையது எனவும், இதனை மஹிந்திரா நிறுவனம் திருடிவிட்டது என்றும் பிஜிஐஎம்இஆர் (PGIMER)-ஐச் சேர்ந்த ராஜிவ் சவுகான் திடுக்கிடும் குற்றம்சாட்டை முன் வைத்திருந்தார். இவர், பிஜிஐஎம்இஆர்-இல் பேராசியர் மற்றும் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். மேலும், வென்டிலேட்டர்கள் குறித்த ஆய்வினையும் செய்து வருகினறார். ஆனால், இவரின் குற்றச்சாட்டிற்கு மஹிந்திரா நிறுவனம் முழுமையாக மறுப்பு தெரிவித்துவிட்டது.
கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த உயிர் காக்கும் கருவிகளை உற்பத்தில் செய்வதில் மஹிந்திரா நிறுவனம் அதி தீவிரம் காட்டி வருகின்றது.
தொடர்ந்து, இந்த கருவியின் விலை மிகக் குறைவாக இருப்பதன் காரணத்தால் சிறிய சிறிய மருத்துவமனைகளாலும் இந்த வென்டிலேட்டர்களை வாங்கி பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியும் மஹிந்திரா நிறுவனம் நம்பிக்க தெரிவித்துள்ளது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!