Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கீல்கீயை ஆக்டிவேட் செய்த ரோல்ஸ்ராய்ஸ் ஓனர், காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பிய திருடர்கள் நடந்தது என்ன?
சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை திருடர்கள் திருட முயன்ற போது உரிமையாளர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் திருடப்பட்ட காரை பத்திரமாக மீட்டெடுத்தார். இந்த சம்பவம் குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகன திருட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு தான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் அதையும் மீறி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கார் உரிமையாளர்களின் அஜாக்கிரதை, தொழிற்நுட்ப பிரச்சனைகளைச் சரியாகக் கவனிக்காமல் பராமரிப்பு இல்லாமல் இருப்பது எனப் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில் திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மட்டுமே உண்மை. இப்படியாகத் திருடப்பட்ட கார் மீண்டும் அதன் உரிமையாளருக்கே கிடைக்கிறது என்றால் அதை விடப் பெரிய அதிர்ஷ்டம் இருக்க முடியாது.
ஏன் என்றால் பெரும்பாலும் கார் அல்லது பைக் எது திருடப்பட்டாலும் அதை உடனடியாக பிரித்து அதன் உதிரிப் பாகங்களை எடுத்து விற்பனைக்கு அனுப்பி விடுவார். வாகன திருட்டுகளே இதற்காகத் தான் நடக்கிறது. உதிரிப்பாகங்களாக வானகங்களைப் பிரிக்கும் போது திருடப்பட்ட வாகனத்தை அடையாளம் காணவே முடியாது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சம்பவம் சில நிமிடங்களிலேயே அந்த காரை அதன் உரிமையாளர் ஜான் என்பவர் திருடர்களிடமிருந்து மீட்டார். இந்த சம்பவத்தை முழுமையாகவும் தெளிவாகவும் காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் சாட்டென் தீவு பகுதியில் உள்ள லைட்ஹவுஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கடந்த 2017ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டான் எடிசன் காரை வாங்கி பயன்படுத்தி வந்தார். அப்பொழுது இதன் விலை 3.46 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ2.70 கோடியாகும் )அவர் வழக்கமாகத் தனது காரை வீட்டின் பின்புறம் உள்ள கராஜில் நிறுத்துவது தான் வழக்கம்.
இப்படியாக இந்த மாத துவக்கத்தில் இவரது காரை திருடும் முயற்சி நடந்தது. அதிகாலை 4 மணிக்கு இவர் வீட்டிற்குள் 5 திருடர்கள் இந்த காரை திருடுவதற்காக ஏறிக் குதித்தனர். வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் வந்து வீட்டிலிருந்த ரோல்ஸ்ராய்ஸ் வாகனத்தின் சாவியைத் திருடிச்சென்று ரோல்ஸ் ராய்ஸ் டான் காரை திருடிச்சென்றனர்.
இந்த திருட்டு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு விஷயம் தெரிந்ததால் அவர் உடனடியாக காரில் உள்ள கில் கீ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி காரை செயல்படாமல் நிறுத்தினார். பின்னர் கார் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து கொண்டு அந்த காரை எடுத்து வந்தார்.
காரின் உரிமையாளர் கில் கீ தொழினுட்பத்தை ஆக்டிவேட் செய்தவுடன் கார் இருக்கும் இடத்திலேயே ஸ்டாப் ஆகிவிடும். அதன் பின்னர் திருடர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் காரை ஸ்டார் செய்ய முடியாது. இதனால் திருடர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர் காரின் உரிமையாளர் நேரடியாக கார் இருக்கும் இடத்திற்குச் சென்று காரை எடுத்து வந்துவிட்டார்.
இந்த கில் கீ எப்படிச் செயல்படுகிறது எனக் காணலாம். ரோல்ஸ் ராய்ஸ் காரை பொருத்தவரை அதிக விலை உயர்ந்த அதிக தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த கார். இந்த காரின் கனெக்டரிவிட்டி ஒரு விபிஎன் வழியாகச் செயல்படுகிறது. காரின் அனைத்து கண்ட்ரோல்களும், தகவல்களும் இந்த விபிஎன்-ல் இருக்கும்.
கார் திருடப்பட்டவுடன் இவர் தன் லேப்டாப்பை திறந்து கார் எங்கிருக்கிறது. எங்குச் சென்று கொண்டிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் செல்கிறது உள்ளிட்ட தகவல்களை லைவ்வாக காண முடியும். அப்பொழுது அந்த விபிஎன்னில் கீல் ஸ்விட்ச் என் ஆப்ஷன் இருக்கும்.
அந்த ஆப்ஷனை ஆக்டிவேட் செய்துவிட்டால் கார் இருக்கும் இடத்தில் அப்படியே நின்றுவிடும். மீண்டும் அந்த ஸ்வீட்ச் டி ஆக்டிவேட் ஆகும் வரை யாராலும் காரை ஸ்டார்ட் செய்ய முடியாது. இவர் இப்படியாகக் காரை ஸ்டாப் செய்து பின்னர் கார் இருக்கும் இடத்தை அறிந்து தன் காரை மீட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு முன்னர் தற்போது திருட்டு நடந்த அதே தெருவிலேயே வேறு ஒரு நபரின் காரும் திருடப்பட்டது. இப்பொழுது வரை அந்த காரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதே திருடர்கள் தான் இந்த காரையும் திருடியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரின் தொழிற்நுட்ப வசதியை வைத்து காரின் திருட்டு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பலரும் ஆச்சரியமாகக் கேட்டுப் பகிர்ந்து வருகின்றனர். இந்த தொழிற்நுட்பம் குறித்த உங்கள் கருத்து என்ன? இந்த தொழிற்நுட்பம் எல்லா கார்களிலும் இருந்தால் எப்படி இருக்கும்?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!