Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கீல்கீயை ஆக்டிவேட் செய்த ரோல்ஸ்ராய்ஸ் ஓனர், காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பிய திருடர்கள் நடந்தது என்ன?
சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை திருடர்கள் திருட முயன்ற போது உரிமையாளர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் திருடப்பட்ட காரை பத்திரமாக மீட்டெடுத்தார். இந்த சம்பவம் குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகன திருட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு தான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் அதையும் மீறி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கார் உரிமையாளர்களின் அஜாக்கிரதை, தொழிற்நுட்ப பிரச்சனைகளைச் சரியாகக் கவனிக்காமல் பராமரிப்பு இல்லாமல் இருப்பது எனப் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில் திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மட்டுமே உண்மை. இப்படியாகத் திருடப்பட்ட கார் மீண்டும் அதன் உரிமையாளருக்கே கிடைக்கிறது என்றால் அதை விடப் பெரிய அதிர்ஷ்டம் இருக்க முடியாது.
ஏன் என்றால் பெரும்பாலும் கார் அல்லது பைக் எது திருடப்பட்டாலும் அதை உடனடியாக பிரித்து அதன் உதிரிப் பாகங்களை எடுத்து விற்பனைக்கு அனுப்பி விடுவார். வாகன திருட்டுகளே இதற்காகத் தான் நடக்கிறது. உதிரிப்பாகங்களாக வானகங்களைப் பிரிக்கும் போது திருடப்பட்ட வாகனத்தை அடையாளம் காணவே முடியாது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சம்பவம் சில நிமிடங்களிலேயே அந்த காரை அதன் உரிமையாளர் ஜான் என்பவர் திருடர்களிடமிருந்து மீட்டார். இந்த சம்பவத்தை முழுமையாகவும் தெளிவாகவும் காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் சாட்டென் தீவு பகுதியில் உள்ள லைட்ஹவுஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கடந்த 2017ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டான் எடிசன் காரை வாங்கி பயன்படுத்தி வந்தார். அப்பொழுது இதன் விலை 3.46 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ2.70 கோடியாகும் )அவர் வழக்கமாகத் தனது காரை வீட்டின் பின்புறம் உள்ள கராஜில் நிறுத்துவது தான் வழக்கம்.
இப்படியாக இந்த மாத துவக்கத்தில் இவரது காரை திருடும் முயற்சி நடந்தது. அதிகாலை 4 மணிக்கு இவர் வீட்டிற்குள் 5 திருடர்கள் இந்த காரை திருடுவதற்காக ஏறிக் குதித்தனர். வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் வந்து வீட்டிலிருந்த ரோல்ஸ்ராய்ஸ் வாகனத்தின் சாவியைத் திருடிச்சென்று ரோல்ஸ் ராய்ஸ் டான் காரை திருடிச்சென்றனர்.
இந்த திருட்டு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு விஷயம் தெரிந்ததால் அவர் உடனடியாக காரில் உள்ள கில் கீ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி காரை செயல்படாமல் நிறுத்தினார். பின்னர் கார் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து கொண்டு அந்த காரை எடுத்து வந்தார்.
காரின் உரிமையாளர் கில் கீ தொழினுட்பத்தை ஆக்டிவேட் செய்தவுடன் கார் இருக்கும் இடத்திலேயே ஸ்டாப் ஆகிவிடும். அதன் பின்னர் திருடர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் காரை ஸ்டார் செய்ய முடியாது. இதனால் திருடர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர் காரின் உரிமையாளர் நேரடியாக கார் இருக்கும் இடத்திற்குச் சென்று காரை எடுத்து வந்துவிட்டார்.
இந்த கில் கீ எப்படிச் செயல்படுகிறது எனக் காணலாம். ரோல்ஸ் ராய்ஸ் காரை பொருத்தவரை அதிக விலை உயர்ந்த அதிக தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த கார். இந்த காரின் கனெக்டரிவிட்டி ஒரு விபிஎன் வழியாகச் செயல்படுகிறது. காரின் அனைத்து கண்ட்ரோல்களும், தகவல்களும் இந்த விபிஎன்-ல் இருக்கும்.
கார் திருடப்பட்டவுடன் இவர் தன் லேப்டாப்பை திறந்து கார் எங்கிருக்கிறது. எங்குச் சென்று கொண்டிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் செல்கிறது உள்ளிட்ட தகவல்களை லைவ்வாக காண முடியும். அப்பொழுது அந்த விபிஎன்னில் கீல் ஸ்விட்ச் என் ஆப்ஷன் இருக்கும்.
அந்த ஆப்ஷனை ஆக்டிவேட் செய்துவிட்டால் கார் இருக்கும் இடத்தில் அப்படியே நின்றுவிடும். மீண்டும் அந்த ஸ்வீட்ச் டி ஆக்டிவேட் ஆகும் வரை யாராலும் காரை ஸ்டார்ட் செய்ய முடியாது. இவர் இப்படியாகக் காரை ஸ்டாப் செய்து பின்னர் கார் இருக்கும் இடத்தை அறிந்து தன் காரை மீட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு முன்னர் தற்போது திருட்டு நடந்த அதே தெருவிலேயே வேறு ஒரு நபரின் காரும் திருடப்பட்டது. இப்பொழுது வரை அந்த காரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதே திருடர்கள் தான் இந்த காரையும் திருடியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரின் தொழிற்நுட்ப வசதியை வைத்து காரின் திருட்டு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பலரும் ஆச்சரியமாகக் கேட்டுப் பகிர்ந்து வருகின்றனர். இந்த தொழிற்நுட்பம் குறித்த உங்கள் கருத்து என்ன? இந்த தொழிற்நுட்பம் எல்லா கார்களிலும் இருந்தால் எப்படி இருக்கும்?
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!